சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று முன் கைது
| சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். | |
| சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் கண் முன்னாள் மிகவும் கேவலமான முறையில் பொசென்கோவை காவல்துறையினர் இழுத்துச் சென்றதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.
|
|
|
|
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோர் 62 லட்சம் பேர்!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோரின் எண்ணிக்கை 62 லட்சமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 35 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆண்டுதோறும், 10}ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் முதல் முதுநிலை பட்டதாரிகள், தொழிற்கல்வி தேர்ச்சி பெற்றோர் வரை ஏராளமானோர் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த 2007}ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள ஆண்கள், பெண்களின் மொத்த எண்ணிக்கை 51.51 லட்சமாக இருந்தது (இதில் ஆண்கள் 29.30 லட்சம்; பெண்கள் 22.21 லட்சம்).
2009-ம் ஆண்டு டிசம்பர் 31}ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள உயிர் பதிவேடுகளின் விவரங்களின் படி, வேலை தேடுவோர் எண்ணிக்கை 62 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள் ஓரிரு லட்சங்கள் மட்டுமே குறைவான எண்ணிக்கையில் உள்ளனர்.
பி.இ. உள்ளிட்ட தொழில் கல்வி தேர்ச்சி பெற்றோர், சட்டம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றோர், பட்டதாரி ஆசிரியர்கள், இதர கல்விதாரர்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பார்வையற்றோர், காது
கேளாதோர் உள்ளிட்ட கல்வியில் தேர்ச்சி பெற்று வேலை தேடும் ஊனமுற்றோர் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை எட்டியுள்ளது.
காத்திருப்போர் எண்ணிக்கையில் பிற்பட்டோர் 26 லட்சமாகவும், மிகவும் பிற்பட்டோர் 16 லட்சமாகவும், ஆதிதிராவிடர்}பழங்குடியினர் 18 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.
சென்னை, கோவை, கடலூர், மதுரை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், நாகப்பட்டினம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வேலைதேடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனினும், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
கடந்த 2008}ல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் 9.60 லட்சம் பேர். ஆனால், இதே ஆண்டில் அரசு பணிகளில் நியமிக்கப்பட்டோர் 26,748 பேர் மட்டுமே.
முடங்கிப்போன தொழில்முறை வழிகாட்டும் பிரிவு:
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வருவோருக்கு அடுத்து என்ன மேல் படிப்பு படிக்கலாம், அதற்கான கல்வி நிலையங்கள், வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் குறித்து வழிகாட்ட தனி பிரிவு தொடங்கப்பட்டது.
ஆனால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (இளைஞர் பயிற்சி), தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் திருவள்ளூர், தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இந்த வழிகாட்டும் பிரிவு இயங்கவில்லை.
பதிவு செய்து காத்திருப்போரில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தொழிற் கல்வி பயிலாதவர்கள் ஆவர். இவர்களில் 50 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
காத்திருந்து…காத்திருந்து…
இப்போதைய நிலையில் கடந்த 1981 முதல் 84 வரை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே நேர் காணல் கடிதம் அனுப்பும் நிலை உள்ளது.
பதிவு செய்து முதலாவது நேர்காணலில் பங்கேற்க குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் வரை காத்திருக்க
வேண்டியுள்ளது.
வயது வரம்பு கடந்ததால் 1986}ம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்தவர்களை நேர்காணலுக்கு அழைக்காமல் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது.
ஆனால், அரசின் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு துறையில் மட்டும் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை அரசு விரைவாக நிரப்ப வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவுள்ளது.
2009-ம் ஆண்டு டிசம்பர் 31}ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள உயிர் பதிவேடுகளின் விவரங்களின் படி, வேலை தேடுவோர் எண்ணிக்கை 62 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள் ஓரிரு லட்சங்கள் மட்டுமே குறைவான எண்ணிக்கையில் உள்ளனர்.
பி.இ. உள்ளிட்ட தொழில் கல்வி தேர்ச்சி பெற்றோர், சட்டம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றோர், பட்டதாரி ஆசிரியர்கள், இதர கல்விதாரர்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பார்வையற்றோர், காது கேளாதோர் உள்ளிட்ட கல்வியில் தேர்ச்சி பெற்று வேலை தேடும் ஊனமுற்றோர் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை எட்டியுள்ளது.
காத்திருப்போர் எண்ணிக்கையில் பிற்பட்டோர் 26 லட்சமாகவும், மிகவும் பிற்பட்டோர் 16 லட்சமாகவும், ஆதிதிராவிடர்}பழங்குடியினர் 18 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.
சென்னை, கோவை, கடலூர், மதுரை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், நாகப்பட்டினம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வேலைதேடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனினும், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
கடந்த 2008}ல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் 9.60 லட்சம் பேர். ஆனால், இதே ஆண்டில் அரசு பணிகளில் நியமிக்கப்பட்டோர் 26,748 பேர் மட்டுமே.
முடங்கிப்போன தொழில்முறை வழிகாட்டும் பிரிவு:
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வருவோருக்கு அடுத்து என்ன மேல் படிப்பு படிக்கலாம், அதற்கான கல்வி நிலையங்கள், வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் குறித்து வழிகாட்ட தனி பிரிவு தொடங்கப்பட்டது.
ஆனால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (இளைஞர் பயிற்சி), தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் திருவள்ளூர், தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இந்த வழிகாட்டும் பிரிவு இயங்கவில்லை.
பதிவு செய்து காத்திருப்போரில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தொழிற் கல்வி பயிலாதவர்கள் ஆவர். இவர்களில் 50 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
காத்திருந்து…காத்திருந்து…
இப்போதைய நிலையில் கடந்த 1981 முதல் 84 வரை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே நேர் காணல் கடிதம் அனுப்பும் நிலை உள்ளது.
பதிவு செய்து முதலாவது நேர்காணலில் பங்கேற்க குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
வயது வரம்பு கடந்ததால் 1986}ம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்தவர்களை நேர்காணலுக்கு அழைக்காமல் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது.
ஆனால், அரசின் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு துறையில் மட்டும் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை அரசு விரைவாக நிரப்ப வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவுள்ளது.
நன்றி:தினமணி
இதுதான் உலகம்:நுழைவுத்தேர்வில் வெற்றிபெற முடியாதவர் நோபல் பரிசை வென்றார்!
அதனால் பல பெற்றோர்கள்தங்கள் பிள்ளைகளை ’கோச்சிங் நிறுவனங்களில் சேர்த்து
கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறார்கள்.கண்ணை மூடிக்கொண்டு பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து தங்கள் பிள்ளைகள் பொறியாளராகவும், மருத்துவராகவும் வரவேண்டும் என கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்.
ஈர்ப்பு சக்தியற்றதா இந்துமதம்? ஒரு வழிப்போக்கனின் பார்வை!
ஹிந்துமதம் ஏன் மற்ற மதங்களைப் போல் மற்ற பிரதேசங்களுக்கு விரிந்து பரவவில்லை? அல்லது இந்தியர்கள்,நேபாளியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் தவிர மற்ற மக்களிடம் ஹிந்துமதத்திர்க்கு ஈர்ப்பு இல்லாததற்கு காரணம் என்ன?நீங்கள் சொல்லலாம் ! ஹிந்துமதம் அமெரிக்காவிலும் இருக்கிறது. இலண்டன், சிங்கப்பூர், ஏன் உலகம் முழுவதும் அனைத்துக் கண்டங்களிலும் கூட இருக்கிறது எனச் சொல்லலாம்! இருக்கிறது !ஆனால், அங்கும் கூட இந்தியர்கள் ,நேபாளியர்கள் அல்லது இலங்கைத் தமிழர்களிடம் மட்டும் தான் ஹிந்துமத வாழ்க்கை முறை, வழிபாடு இருக்கிறது என்ற உண்மையை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்!
ரத்தன் டாடா-வுக்கு பிறகு யார்?
பிரச்சினை ஒன்று;சமூகப் பார்வைகள் இரண்டு
சாந்தி சவுந்தரராஜன்! நினைவிருக்கிறதா?கத்தார் நாட்டில் 2006-ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800-மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று, குற்றச்சாட்டின் பேரில் அவரிடமிருந்து மீண்டும் பதக்கம் பறிக்கப்பட்டது நியாபகம் இருக்கலாம்!
குற்றச்சாட்டு! அனைத்துலக தடகள அமைப்பால் அவர் பெண் இல்லை என அறிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதோடல்லாமல், உடனடியாக முதல் விமானத்தில் இந்திய நிர்வாகத்தால் திருப்பி அனுப்பப்பட்டார்.எண்ணி நாற்பத்தி என்டு மணி நேரத்திற்குள் அவரிடமிருந்து பதக்கம் பறிக்கப்பட்டது.அவருடன் எந்த அதிகாரிகளும் துணைக்கு வரவில்லை.இந்திய நிர்வாகத்தால் மிரட்டி அனுப்பப்பட்டார்.அனைத்துலக அளவில் அவமானப்படுத்தப்பட்ட அவர் பிறகு தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.
இத்துணைக்கும் சாந்தி கத்தார் ஆசிய விளையாட்டிற்கு முன்பு ஆறு சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்.பாலினம் குறித்த பரிசோதனைகளையும் கடந்து வந்தார்.
மற்றொருவர் கெஸ்தெர் செமேன்யா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தடகள வீராங்கனை. சமீபத்தில் 800-மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாம்பியனானவர்.இவருக்கும் பாலினம் குறித்த அதே பிரச்சினை.ஆனால் அவரிடமிருந்து பதக்கம் பறிக்கப்படவில்லை.அவருடைய நாடும் அவரை கைவிடவில்லை.ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்காவும் அவருக்குப் பின் அணி வகுத்தது.ஜோகன்னஸ்பெர்க்கில் அவருக்கு சிறப்பான வரவேற்ப்பளிக்கப்பட்டது.
அனைத்துலக தடகள அமைப்பு நிறவெறியை கடைபிடிப்பதாக தென் ஆப்பிரிக்காவினர் குற்றம் சாட்டினர்.தென் ஆப்பிரிக்க அரசு ஒரு படி மேலே போய் “கெஸ்தெர் செமேன்யா தடகளப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டால் மூன்றாம் நாடுகள் போர் தொடுக்கும்” என மிரட்டியது.
ஆனால் நாம் என்ன செய்தோம்?சாந்தி தெரிந்தே எந்த தவறும் செய்யவில்லை.
தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதார சூழலில் இருந்து வந்தவர்.பிறந்ததில் இருந்து எந்த ஒரு மரபணு பிரச்சினைகளையும் உணராதவர்.பெண்ணாகவே வளர்ந்தார்.ஆனால் நாம் கைவிட்டு விட்டோம்!
இதுவரையும் அவருடைய பிரச்சினை குறித்து விசாரிக்க எந்த ஒரு வல்லுநர் குழுவும் அமைக்கப்படவில்லை.சாதரண நடைமுறை விசாரணைகள் மட்டுமே நடந்துள்ளது.அது குறித்த முடிவுகளும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.இதுவரையிலும் யாருக்கும் சாந்தியிடம் என்ன தவறு இருக்கிறது என தெரியாது!
எதோ தமிழ்நாடு அரசு புண்ணியத்தில் அவருக்கு பண பரிசும், வேலையும் கொடுக்கப்பட்டது.
இதில் மேலும் கொடுமை என்னவென்றால், கெஸ்தர் செமேன்யாவிடம் இருந்து பதக்கம் திரும்ப்பப் பெறப்படவில்லை.ஆனால் இந்திய நிர்வாகம் சர்வதேச தடகள சம்மேளத்திடம் எந்த ஒரு எதிர்ப்பையும் முன்வைக்காமல் நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குள் பதக்கத்தை திருப்பிக்கொடுத்து விட்டது.
அதுமட்டுமல்லாமல் கெஸ்தர் செமேன்யாவின் பாலினம் குறித்த முடிவை நவம்பர் மாதம் அறிவிப்பதாக சர்வதேச சம்மேளனம் அறிவித்திருக்கிறது.ஆனால் சாந்தியின் பிரச்சினையில் முடிவு உடனடியாக அறிவிக்கப்பட்டது.ஏன் இந்த இருவேறு நிலை?
மொத்தத்தில் சாந்திக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது!
நன்றி:டைம்ஸ் ஆப் இந்தியா
மாவோயிஸ்ட்டுக்களுக்கு எதிரான போரில் தோற்றுக்கொண்டிருக்கிறோம்:பிரதமர்
“மாவோயிஸ்ட்களின் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது;அதே போல,மாவோயிஸ்டுக்கள் ஏழைகளின் உரிமைகளுக்காக போராடுவதாக கூறுவதால் அவர்களுக்கான ஆதரவும் அதிகரித்துக்கொண்டே வருகிறது;நாம் மாவோயிட் களுக்கு எதிரான போரில் தோற்றுக்கொண்டிருக்கிறோம்” என பிரதமர் மன்மோகன் சிங் இன்று காவல்துறை உயரதிகாரிகளுக்கான மாநாட்டில் தெரிவித்தார்.
மாவோயிஸ்ட்டுக்களின் வன்முறையில் கடந்த இருபது ஆண்டுகளாக 6000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.மாவோயிஸ்ட்கள் மத்திய இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் நடமாடுகிறார்கள்.இன்னும் சொல்லப்போனால் பல இடங்களில் அரசு இயந்திரங்களை அவர்கள் தான் நடத்துகிறார்கள்.இடதுசாரி தீவிரவாதம் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
“மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நமது சிறப்பான நடவடிக்கைகளையும் மீறி, பழங்குடிகள்,கிராமப்புற ஏழைகள்,அறிவுஜீவிகள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது.மாவோயிஸ்டுக்களின் வன்முறையும் குறைந்தபாடில்லை.மாவோயிஸ்டுக்கள் மொத்தம் மாவட்டங்களில் செயல்படுகிறார்கள்.குறிப்பாக மத்திய பிரதேசம்,ஆந்திரபிரதேசம்,சத்திஸ்கார்,மேற்கு வங்கம்,ஜார்கண்ட், பிகார் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அவர்களின் செயல்பாடு அதிக அளவில் உள்ளது” என பிரதமர் தெரிவித்தார்.
எனவே மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளை பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு?
இந்தியாவில் 1931-ஆம் வருடத்திற்கு பிறகு பிற்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்து எந்த ஒரு கணக்கெடுப்பும் இல்லை.இடையிடையே அவ்வப்போது இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு கமிஷன்கள் அமைக்கப்பட்டாலும், பிற்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்து 1931-க்குப் பிறகு சரியான புள்ளிவிபரங்கள் இல்லாததால், ஒவ்வொரு கமிஷன்களும் ஒரு புள்ளி விபரத்தை கொடுத்து வந்துள்ளன.மண்டல் கமிஷன் கூட, 1931-மக்கள் தொகை கணக்கெடுப்பினை பயன்படுத்தி, extrapolation என்ற கணிதமுறையைக் கொண்டு இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 52-சதவிகிதம் என அறிக்கை சமர்பித்தது.
சமீபத்தில், பதினான்காவது மக்களவையின் பாராளுமன்ற குழு “பிற்படுத்தப்பட்டோர் குறித்து சரியான புள்ளிவிபரம் இல்லாமல் அரசு எவ்வாறு பிற்படுத்தப்பட்டோர் நல்வாழ்வுக்காக நிதி ஒதுக்கீடு செய்கிறது” என கேள்வி எழுப்பியது.
மத்திய புள்ளிவிபரத்துறை அமைச்சகத்தின் NSSO – சர்வே இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 35 சதவிகிதம் என குறிப்பிட்டுள்ளது.இதற்கிடையில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் குறித்து, மத்திய அரசால் 2002-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வே, இந்தியாவில் கிராமப்புறங்களில் பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகை 38.5 சதவிகிதம் என தெரிவிக்கிறது.
இந்த புள்ளிவிபரத்தில் தமிழ்நாடு 54.37 சதவிகித பிற்படுத்தப்பட்டோருடன் முன்னிலை வகிக்கிறது.மற்ற மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை வருமாறு: உத்திரப்பிரதேசம்(51.78%), பிகார்(37%),சத்திஸ்கார்(50.37%),குஜராத்(44.83%),ஆந்திரபிரதேசம்(43.41%),இராஜஸ்தான்(46.80%),ஹரியானா(28.18%), பஞ்சாப்(20.60%),மஹாராஷ்டிரா(14.54%).
மொத்தத்தில் பதினைந்து மாநிலங்களில் பெரும்பான்மையாகவும், உத்திரகான்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் குறைவான எண்ணிக்கையிலும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலே குறிப்பிடப்பட்ட சர்வேயானது கிராமப்புறத்தை மட்டும் கணக்கில் கொண்டதாகும்.கிராமப்புறம் மற்றும் நகர்புறம் இரண்டையும் சேர்த்து மத்திய புள்ளிவிவகாரத்துறை அமைச்சின் கணக்குப்படி இந்தியாவில் பிற்பட்டோரின் எண்ணிக்கை 35% சதவிகிதமாகும்.
இது குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுத் தலைவர் ஹனுமந்தராவ், ‘கிராமப்புறங்களில் பிற்பட்டோரின் எண்ணிக்கை சர்வேயில் குறிப்பிடப்பட்டதை விட அதிகமாக இருக்கக்கூடும்.எனவே பிற்படுத்தப்பட்டோர் குறித்து சரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேண்டும்’ என்றார்.
நேபாளத்தில் தொடரும் இந்திய பிராமண ஏகாதிபத்தியம்!
நேற்று முன்தினம், நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலில் பூஜை செய்யச் சென்ற இந்திய பூசாரிகள் ராகவேந்திரா பாட்டாவும்,கிரிஷ் பாட்டாவும்(இருவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்) , இந்திய பூசாரிகள்
எதிர்ப்பு போராட்டக் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் அவர்கள் இருவரும் பலத்த பாதுகாப்புக்கிடையில் பசுபதிநாத் கோவிலில் பூஜை செய்துள்ளனர்.இந்தத் தாக்குதலுக்கு நேபாள அரசின் சார்பிலும்,இந்திய அரசின் சார்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பசுபதிநாத் கோவிலில் இந்திய பூசாரிகள் பூஜை செய்யும் வரலாறு குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகிறது.அதாவது, இந்தக் கோவிலில் பூஜை செய்பவர்கள் பொதுவாக தென்னிந்தியாவைச் சேர்ந்த பிராமணர்கள்!இந்த நடைமுறையானது, அப்போது ஒருங்கிணைந்த பாரதம் வேண்டி வலியுறுத்திய ஆதிசங்கரரின் வேண்டுகோளின்படி கி.பி.ஆறாம் நூற்றாண்டில், நேபாள மன்னர் ‘யக்ஷ மல்லா’வால் ஆரம்பிக்கப்பட்டதாக ஒரு வரலாறு உள்ளது.
மற்றொரு கருத்தானது, மன்னர் இறந்தால் நேபாளத்தில் ஒருவருடம் துக்கம் கடைபிடிக்கப்படுமாம்!.அவ்வாறு துக்கம் கடைப்பிடிக்கப்படும் போது யாரும் ஒரு வருடத்திற்கு கோவில் பூஜைகளில் ஈடுபட முடியாதாம்.அதனால் அப்போதிருந்த மன்னர் இறந்ததால், நேபாள பூசாரிகள் பூஜையில் ஈடுபட முடியவில்லை.இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க, கோவிலில் பூஜைகளை அந்த ஒருவருட காலத்திற்கு தொடரும் பொருட்டு,இந்திய பூசாரிகள் அங்கு வந்ததாகவும், அதுவே பின்பு நடைமுறையானதாகவும் கூறப்படுகிறது.
பசுபதிநாத் கோவிலில் நெடுங்காலமாக இருந்துவந்த இந்த முறையை மாற்றி, முந்தைய நேபாள மாவோயிஸ்ட் அரசு, மண்ணின் மைந்தர்களை கோவில் பூசாரிகளாக நியமித்தது. இதை எதிர்த்து நேபாள உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்திய பூசாரிகளே நீடிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.இருப்பினும் இந்திய பூசாரிகளை மாற்றக்கோரி ஒரு போராட்டக்குழு போராட்டத்தை தொடர்ந்து வருகிறது.இந்தப் போராட்ட குழு தான் இந்திய பூசாரிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக் கூறப்படுகிறது
இப்போது மன்னராட்சியும் இல்லை.அதனால் மன்னர் இறந்தால் ஒரு வருடம் யாரும் கோவில் வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடாது என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டிய அவசியமும் இப்போது இல்லை.
இந்த நடைமுறையானது, முந்தைய நேபாள மன்னருக்கும், ஆதி சங்கரருக்கும் இடையிலான புரிந்துணர்வினால் கொண்டுவரப்பட்டது என்றாலும், மன்னராட்சி இல்லாத மக்களாட்சி உள்ள இந்த தலைமுறையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை.இந்த நடைமுறையானது சில காரணங்களுக்காக இடையில் கொண்டுவரப்பட்டது.இப்போது மக்கள் மாற்றத்தை விரும்பும் போது அதை ஏன் இந்திய நேபாள அரசுகள் தடுக்க வேண்டும்?
இந்திய பூசாரிகளைப் போல கற்றறிந்த பூசாரிகள் நேபாளத்தில் இருக்கும் போது, ஏன் இந்திய பூசாரிகள் வழிபாட்டு நடைமுறைகளை இன்னும் தொடரவேண்டும்?
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை விரட்டுவதற்கு நமக்கு எப்படி உரிமை இருந்ததோ, அதேபோல் ஏன் இந்திய பிராமண ஏகாதிபத்தியத்தை நேபாளத்தில் இருந்து விரட்டுவதற்கு நேபாள் மக்களுக்கு உரிமை இல்லை?நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலில், நேபாள பூசாரிகள் தான் பூஜை செய்யவேண்டும் என நேபாள மக்களில் ஒரு பிரிவினர் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?
கேட்டால், இந்திய பிராமண பூசாரிகள் பூஜை செய்வது தான் மரபாம்!இப்படி மரபு மரபு என்று சொல்லியே கோடிக்கணக்கான மக்களை, ஆயிரக்கணக்கான வருடங்கள் அறியாமை இருளில் வைத்தவர்களிடம் மற்றம் வேண்டி நேபாள் மக்கள் போராடுவதால் நியாயம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே இந்திய எதிர்ப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இந்தியா, நேபாள விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது இந்த எதிர்ப்புணர்வை அதிகரிக்கத் தான் செய்யும்!
இரு சோதனைகள்;இருவேறு கோணங்கள்
அறிவியல் பற்றி அறிந்துகொள்ள தயங்குபவர்கள் கூட இந்த இரண்டு சோதனைகள் பற்றி அறியாமல் இருக்கமாட்டார்கள்.காரணம்! அவ்வளவு விளம்பரங்கள்,ஊடகச் செய்திகள், விவாதங்கள் இந்தியாவில் 
மட்டுமல்ல;உலகம் முழுவதிலும். ஒன்று! அணுகுண்டு சோதனை செய்து புவியை அதிர வைத்தது;மற்றொன்று! நிலவுக்கு விண்கலம் அனுப்பி விண்ணுலகையும் மண்ணுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது!
இந்த இரு சோதனை வெற்றிகளாலும் சராசரி இந்தியன் தனது சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டது உண்மை!அதே நேரம் அண்டைநாடுகளும், மேற்கு நாடுகளும் மண்டை காய்ந்ததும் உண்மை!
இந்நிலையில் இந்த இரு சோதனைகள் குறித்தும் அறிவியல் மற்றும், அரசியல் வட்டாரத்தில் நடைபெறும் விவாதங்கள், தினந்தோறும் வரும் ஊடகச் செய்திகளால், விஞ்ஞானிகளின் நம்பகத் தன்மை குறித்து சராசரி இந்தியனுக்கு சந்தேகம் வருவது இயல்பு!
போக்ரான்-2 அணுகுண்டு சோதனை முழுமையாக வெற்றிகரமாக அமையவில்லை என அணு விஞ்ஞானி சந்தானம் முதல் சர்ச்சையைக் கிளப்பினார்.அவருக்கு ஆதரவான அணியினர் இதை உண்மை என்று ஒப்புக்கொண்டதோடல்லாமல், இந்தியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.ஆனால், அப்துல்கலாம் தலைமையிலான அணியினர் ‘போக்ரான்-2 அணுகுண்டு சோதனை முழுமையான வெற்றி எனவே மீண்டும் அணுகுண்டு சோதனை தேவையில்லை’ எனக் கூறுகின்றனர்.
எது உண்மை என மண்டையை குடைவதற்குள், நிலவை ஆராய அனுப்பப்பட்ட சந்திராயன் விண்கலத்தின் ரேடியோ தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரோ அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறது.சென்ற மாதம் சந்திராயனில் இருந்த ‘சென்சார்’ செயலிழந்து விட்டதாக கூறினார்கள்.இருந்தும் பிரச்சினை ஒன்றுமில்லை என்றார்கள்.இப்போது நிரந்திரமாக செயலிழந்து போய்விட்டதை சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டு ஆண்டுகால பணிக்காக அனுப்பப்பட்ட சந்திராயன் விண்கலம், ஒரு ஆண்டிலேயே 90 முதல் 95 சதவிகித பணிகளை (காதில் பூ?) பூர்த்தி செய்துவிட்டதாம்!
இரண்டு திட்டங்களுக்கும் எவ்வளவு பணம் செலவாகியிருக்கும்?போக்ரான்- 2 திட்டம் பாதுகாப்பு சம்பந்த்தப்பட்டதால் எவ்வளவு செலவானது என மக்களுக்கு தெரியாது.ஆனால் சந்திராயன் திட்டத்திற்கு ஆனா செலவு 3.8 பில்லியன் ரூபாய்கள்!இது இதே திட்டங்களுக்கு அமெரிக்கா,சீனா மற்றும் ஜப்பான் செய்த செலவைவிட பலமடங்கு குறைவு எனக் கூறப்படுகிறது.
நாட்டில் முப்பது கோடிக்கும் மேற்பட்டோர் ஒருவேளை சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிக்கிறார்கள்,ஆயிரக்கணக்கான விவசாயிகள் வருடந்தோறும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்,கோடிக்கணக்கான குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் தவிக்கிறார்கள்,கோடிக்கணக்கான பேருக்கு மருத்துவம்,கல்வி,மின்சாரம், குடிநீர் வசதிகள் இல்லை,தாய்-சேய் இறப்பு விகிதங்களை இன்னும்குறைக்க முடியவில்லை,பன்றிக் காய்ச்சல் போன்று புதிது புதிதாக வரும் நோய்களை தடுக்க முடியாமல் தவிக்கிறோம். இப்படி இருக்கும் ஒரு நாட்டிற்கு இதுபோன்ற செலவீனங்கள் சரிதானா? என சமூக அக்கறைகொண்ட கொண்ட பலரால் வைக்கப்படும் விமர்ச்சனத்திலும் உண்மையில்லாமல் இல்லை!
இன்னொருபுறம் பார்த்தால், இந்த இரண்டு பரிசோதனைகளும், உலக நாடுகளை இந்தியாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தன! அணுகுண்டு சோதனைகளை விமர்ச்சனம் செய்திருந்தாலும் கூட, இந்தியாவை தவிர்க்க முடியாத சக்தி என வளர்ச்சியடைந்த நாடுகள் புரிந்துகொண்டன.
அது அமெரிக்காவாக இருந்தாலும்,ரஷியாவாக இருந்தாலும்,ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் அல்லது சீனாவாக இருந்தாலும் சரி அறிவியல் பரிசோதனைகளில் வெற்றி தோல்விகள், குறைபாடுகள் சகஜம் தான்.இது தேவை இல்லாத செலவு என இஸ்ரோ மீது ஒவ்வொரு காலகட்டத்திலும் விமர்ச்சனம் உண்டு.ஆனால் இஸ்ரோ அனுப்பிய செயற்கைக் கோள்களால் சமூக,பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு புரட்சிகள்/மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது!
-
தொகுப்புகள்
- பெப்ரவரி 2010 (1)
- ஜனவரி 2010 (2)
- December 2009 (1)
- நவம்பர் 2009 (1)
- செப்டம்பர் 2009 (4)
- ஆகஸ்ட் 2009 (6)
- ஜூலை 2009 (8)
- ஜூன் 2009 (11)
- மே 2009 (3)
- April 2009 (7)
- மார்ச் 2009 (1)
- பெப்ரவரி 2009 (3)
-
வகைகள்
-
RSS
வரவுகள் RSS
மறுமொழிகள் RSS