விமலவன்

சாமானியன்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று முன் கைது

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் கண் முன்னாள் மிகவும் கேவலமான முறையில்  பொசென்கோவை காவல்துறையினர் இழுத்துச் சென்றதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.

 

 

08/02/2010 பதிந்தவர் vimalavan | செய்திகள் | | No Comments Yet

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோர் 62 லட்சம் பேர்!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோரின் எண்ணிக்கை 62 லட்சமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 35 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆண்டுதோறும், 10}ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் முதல் முதுநிலை பட்டதாரிகள், தொழிற்கல்வி தேர்ச்சி பெற்றோர் வரை ஏராளமானோர் பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த 2007}ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள ஆண்கள், பெண்களின் மொத்த எண்ணிக்கை 51.51 லட்சமாக இருந்தது (இதில் ஆண்கள் 29.30 லட்சம்; பெண்கள் 22.21 லட்சம்).

2009-ம் ஆண்டு டிசம்பர் 31}ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள உயிர் பதிவேடுகளின் விவரங்களின் படி, வேலை தேடுவோர் எண்ணிக்கை 62 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள் ஓரிரு லட்சங்கள் மட்டுமே குறைவான எண்ணிக்கையில் உள்ளனர்.

பி.இ. உள்ளிட்ட தொழில் கல்வி தேர்ச்சி பெற்றோர், சட்டம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றோர், பட்டதாரி ஆசிரியர்கள், இதர கல்விதாரர்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பார்வையற்றோர், காது

கேளாதோர் உள்ளிட்ட கல்வியில் தேர்ச்சி பெற்று வேலை தேடும் ஊனமுற்றோர் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை எட்டியுள்ளது.

காத்திருப்போர் எண்ணிக்கையில் பிற்பட்டோர் 26 லட்சமாகவும், மிகவும் பிற்பட்டோர் 16 லட்சமாகவும், ஆதிதிராவிடர்}பழங்குடியினர் 18 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.

சென்னை, கோவை, கடலூர், மதுரை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், நாகப்பட்டினம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வேலைதேடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனினும், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

கடந்த 2008}ல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் 9.60 லட்சம் பேர். ஆனால், இதே ஆண்டில் அரசு பணிகளில் நியமிக்கப்பட்டோர் 26,748 பேர் மட்டுமே.

முடங்கிப்போன தொழில்முறை வழிகாட்டும் பிரிவு:

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வருவோருக்கு அடுத்து என்ன மேல் படிப்பு படிக்கலாம், அதற்கான கல்வி நிலையங்கள், வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் குறித்து வழிகாட்ட தனி பிரிவு தொடங்கப்பட்டது.

ஆனால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (இளைஞர் பயிற்சி), தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் திருவள்ளூர், தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இந்த வழிகாட்டும் பிரிவு இயங்கவில்லை.

பதிவு செய்து காத்திருப்போரில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தொழிற் கல்வி பயிலாதவர்கள் ஆவர். இவர்களில் 50 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

காத்திருந்து…காத்திருந்து…

இப்போதைய நிலையில் கடந்த 1981 முதல் 84 வரை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே நேர் காணல் கடிதம் அனுப்பும் நிலை உள்ளது.

பதிவு செய்து முதலாவது நேர்காணலில் பங்கேற்க குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் வரை காத்திருக்க

வேண்டியுள்ளது.

வயது வரம்பு கடந்ததால் 1986}ம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்தவர்களை நேர்காணலுக்கு அழைக்காமல் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது.

ஆனால், அரசின் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு துறையில் மட்டும் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை அரசு விரைவாக நிரப்ப வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவுள்ளது. 

2009-ம் ஆண்டு டிசம்பர் 31}ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள உயிர் பதிவேடுகளின் விவரங்களின் படி, வேலை தேடுவோர் எண்ணிக்கை 62 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள் ஓரிரு லட்சங்கள் மட்டுமே குறைவான எண்ணிக்கையில் உள்ளனர்.

பி.இ. உள்ளிட்ட தொழில் கல்வி தேர்ச்சி பெற்றோர், சட்டம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றோர், பட்டதாரி ஆசிரியர்கள், இதர கல்விதாரர்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பார்வையற்றோர், காது கேளாதோர் உள்ளிட்ட கல்வியில் தேர்ச்சி பெற்று வேலை தேடும் ஊனமுற்றோர் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை எட்டியுள்ளது.

காத்திருப்போர் எண்ணிக்கையில் பிற்பட்டோர் 26 லட்சமாகவும், மிகவும் பிற்பட்டோர் 16 லட்சமாகவும், ஆதிதிராவிடர்}பழங்குடியினர் 18 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.

சென்னை, கோவை, கடலூர், மதுரை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், நாகப்பட்டினம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வேலைதேடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனினும், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

கடந்த 2008}ல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் 9.60 லட்சம் பேர். ஆனால், இதே ஆண்டில் அரசு பணிகளில் நியமிக்கப்பட்டோர் 26,748 பேர் மட்டுமே.

முடங்கிப்போன தொழில்முறை வழிகாட்டும் பிரிவு:

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வருவோருக்கு அடுத்து என்ன மேல் படிப்பு படிக்கலாம், அதற்கான கல்வி நிலையங்கள், வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் குறித்து வழிகாட்ட தனி பிரிவு தொடங்கப்பட்டது.

ஆனால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (இளைஞர் பயிற்சி), தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் திருவள்ளூர், தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இந்த வழிகாட்டும் பிரிவு இயங்கவில்லை.

பதிவு செய்து காத்திருப்போரில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தொழிற் கல்வி பயிலாதவர்கள் ஆவர். இவர்களில் 50 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

காத்திருந்து…காத்திருந்து…

இப்போதைய நிலையில் கடந்த 1981 முதல் 84 வரை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே நேர் காணல் கடிதம் அனுப்பும் நிலை உள்ளது.

பதிவு செய்து முதலாவது நேர்காணலில் பங்கேற்க குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.

வயது வரம்பு கடந்ததால் 1986}ம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்தவர்களை நேர்காணலுக்கு அழைக்காமல் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது.

ஆனால், அரசின் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு துறையில் மட்டும் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை அரசு விரைவாக நிரப்ப வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவுள்ளது.

நன்றி:தினமணி

31/01/2010 பதிந்தவர் vimalavan | வேலைவாய்ப்பு | | No Comments Yet

இதுதான் உலகம்:நுழைவுத்தேர்வில் வெற்றிபெற முடியாதவர் நோபல் பரிசை வென்றார்!

நல்ல வேலையாக தமிழகத்தில்உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை இப்போது ரத்து செய்திருக்கிறார்கள்.ஆனாலும் ஐ.ஐ.டி,அகில இந்திய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை நிறுவனங்களில்  சேருவதற்கு  இன்னமும் நுழைவுத் 
தேர்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

அதனால் பல பெற்றோர்கள்தங்கள் பிள்ளைகளை ’கோச்சிங்  நிறுவனங்களில் சேர்த்து 

கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறார்கள்.கண்ணை மூடிக்கொண்டு பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து தங்கள் பிள்ளைகள்  பொறியாளராகவும், மருத்துவராகவும் வரவேண்டும் என கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இங்கே ஒருவர் பத்தாண்டுகளுக்கு முன்பு ஐ.ஐ.டி நுழைவுத் தேர்விலும், வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி நடத்திய நுழைவுத் தேர்விலும் தோல்வியடைந்தார்.ஆனாலும் சென்ற(2009) ஆண்டுக்காண வேதியலுக்கான நோபல் பரிசை வென்றிருக்கிறார்.இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் 
நான் யாரை குறிப்பிடுகிறேன் என்று!
ஆமாம்! நம்ம வெங்கட்டராமன் ராமகிருஷ்ணன் தான்.   
நேற்று ஐ.ஐ.எஸ்.சி எனப்படும் இந்திய அறிவியல் நிறுவனத்தில் நடந்த பொது நிகழ்ச்சியொன்றில் தான் அவர் இதனை குறிப்பிட்டார்.அதுமட்டுமல்ல!இவருக்கு Post-Doctoral Degree எனப்படும் தனது ஆராய்ச்சி  மேற்படிப்பை முடித்த பிறகும் ஆரம்பத்தில் வேலை கிடைக்கவில்லையாம்.இத்துனைக்கும் இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட அயல்நாட்டு பல்கலை கழகங்களுக்கு விண்ணப்பித்திருந்தாராம்!
தோல்விகள் தான் மிகப்பெரிய வெற்றிக்கு படிக்கட்டு என்பதை நிருபித்துள்ளார்!கண்டிப்பாக இவர் சாதனையாளர் மட்டுமல்ல!பலருக்கு ஒரு சிறந்த முன்னோடியும் கூட!

 

05/01/2010 பதிந்தவர் vimalavan | செய்திகள் | | No Comments Yet

ஈர்ப்பு சக்தியற்றதா இந்துமதம்? ஒரு வழிப்போக்கனின் பார்வை!

இந்துமதத்தை எப்படி வரையறை செய்வது கடினமோ, அதே போல இந்துமதம் எவ்வளவு தொனமையானது என்பதை கண்டுபிடிப்பது என்பதும் கடினமானது.காரணம்! இந்துமதம் என்பது ஆரியர்கள் வருகைக்கு முன்பே இந்திய மக்களிடம் ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது என்பதற்கு நமக்கு சிந்து,ஹராப்பா நாகரிகங்களில் இருந்து வரலாற்று பூர்வமான ஆதாரங்கள் உள்ளது.ஒரு எளிமையான மதம் ஆரியர்களின் வருகைக்கு பின்பு ஒரு சிக்கலான மதமாக உருப்பெற்றது. இந்த சிக்கலை எதிர்த்துத் தான் இந்துமதத்தில் இருந்து புத்தம், ஜைன மற்றும் சீக்கிய மாதங்கள் உருவானது.ஒரு எளிமையான மதமாக உலகம் முழுவதும் பரவியிருக்க வேண்டிய மதம் ஏன் இந்திய துணைக் கண்டத்திற்குள் முடங்கிவிட்டது?ஒருவேளை ஆரியர்களின் குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் இன்று உலமகம் முழுவதும் இந்துமதமே வாழ்க்கை முறையாக இருந்திருக்குமோ? என்ற கேள்வியும் எழுகிறது.

  ஹிந்துமதம் ஏன் மற்ற மதங்களைப் போல் மற்ற பிரதேசங்களுக்கு விரிந்து பரவவில்லை? அல்லது இந்தியர்கள்,நேபாளியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் தவிர மற்ற மக்களிடம் ஹிந்துமதத்திர்க்கு ஈர்ப்பு இல்லாததற்கு  காரணம் என்ன?நீங்கள் சொல்லலாம் ! ஹிந்துமதம் அமெரிக்காவிலும் இருக்கிறது. இலண்டன், சிங்கப்பூர், ஏன் உலகம் முழுவதும் அனைத்துக் கண்டங்களிலும் கூட இருக்கிறது எனச் சொல்லலாம்! இருக்கிறது !ஆனால், அங்கும் கூட இந்தியர்கள் ,நேபாளியர்கள் அல்லது இலங்கைத் தமிழர்களிடம் மட்டும் தான் ஹிந்துமத வாழ்க்கை முறை, வழிபாடு இருக்கிறது என்ற உண்மையை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்!

 கண்டிப்பாக இதற்கு விதிவிலக்காக மற்ற பிரதேசங்களைச்  சேர்ந்த சிலர் ஹிந்துமதத்தை 
அதன் இந்திய விதிமுறைகள் தெரியாமல் பின்பற்றலாம்! ஆனால் பொதுவாக இந்துமதத்திற்கு ஈர்ப்பு சக்தி இல்லை
என்ற கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஏன் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கூட   இந்திய கலாச்சாரம் மட்டும் தான் பரவியிருக்கிறதே தவிர ஹிந்து மதம் பரவவில்லை!
இதை இன்னொரு முறையிலும்  பார்க்கலாம்! இந்தியா பல நூற்றாண்டுகளாக இஸ்லாமிய ஆதிக்கத்தில்
இருந்திருக்கிறது.பிறகு இருநூறு வருடங்களாக ஆங்கில காலனி ஆதிக்கத்தில் இருந்திருக்கிறது.இந்தக் இரு காலகட்டத்திலும் பெரும்பாலும் இந்துக்கள் தான் இஸ்லாமுக்கோ அல்லது கிறித்துவத்திற்க்கோ மாறியிருக்கிறார்கள்.ஆனால் பிற மதங்களில் இருந்து இந்துமதத்திற்கு மாறியவர்களின் எண்ணிக்கை குறைவு அல்லது அதற்க்கான வரலாற்று ஆதாரங்கள் அவ்வளவாக இல்லை!அதற்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் கூட அவையனைத்தும் தங்களை தாமே திருப்திபடுத்தி கொள்ள கூறப்படுவதாகும். 
  இந்தியாவில் தோன்றிய புத்த மதம் இந்தியாவைத் தாண்டி அனைத்து கிழக்குப் பிரதேசங்களுக்கும் பரவியுள்ளது. மேற்கு ஆசியாவில் உருவான இஸ்லாம் மற்றும் கிறித்துவம், மொழி இனம் என்ற எல்லை தாண்டி அனைத்து நாடுகளிலும் காலூன்றியுள்ளது.ஆனால் இங்கு இந்தியாவில் நாம் ஹிந்து மதத்தை இப்போது இருக்கும் நிலையில் பாதுகாப்பதற்கே அவ்வப்போது வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டியுள்ளது.
ஏன் பிறமதத்தினர்  ஹிந்துமதத்தை தழுவ முற்படுவதில்லை?ஏன் ஹிந்துமதம் பிற தேசங்களில் பரவவில்லை?என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்த போது, எனது நண்பர் ஒரு கருத்தை கூறினார். அது பி.ஜே.பி மற்றும் சங்கப் பரிவாரங்கள் முதல் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி வரை  அவ்வப்போது கூறும் கருத்துத் தான்.அதாவது ஹிந்து மதத்தை நாம் வரையறை செய்யமுடியாது!அது ஒரு வாழ்க்கை முறை!காரணம்! இந்தியாவில் பல்வேறு இனம், மொழி சேர்ந்த ஹிந்து மக்கள் வாழ்கிறார்கள்.அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கடவுள் உருவகத்தை(பொதுவாக குடும்ப மூதாதையர்), வழிபாட்டுமுறையை, குலதெய்வத்தை வணங்குகிறார்கள், வழிபடுகிறார்கள்.  இதற்கு மாறாக கத்தோலிக்க கிறித்துவ மதம், போப் ஆண்டவரைத் தலைவராகவும், ரோமபுரி தேவாலயத்தை தலைமைப் பீடமாகவும் கொண்டு இயங்குகிறது.அதே போல மற்ற மதங்களிலும் சிறிய அல்லது பெரிய அளவில், குறிப்பிட்ட அமைப்பு ,மத விவகாரங்களை இயக்குகிறது.காரணம் அவர்கள் உருவமுள்ள அல்லது உருவமற்ற ஒரே கடவுளை வழிபடுகிறார்கள்.பொதுவாக ஒரே மாதிரியான வழிபாட்டு முறையை,வழிபாட்டு தளங்களைக் கொண்டுள்ளார்கள்.ஆனால் வரையறை செய்வதே கடினமாக இருக்கும் போது எப்படி இந்துக்கள் மற்றவர்களை இந்து மதத்திற்கு ஈர்க்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுவது?ஏற்றுக்கொள்ள கூடியது தான்!
அனைவரையும் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தை போல ஒரே குடையின் கீழ் கொண்டுவருவது கடினம்.இது போன்ற இயலாத் தன்மையினால் தான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கப் பரிவாரங்கள் அவவப்போது ஆங்காங்கே  இந்துமதத்தைப் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றன.  
   
அதற்கு மேலும் சிந்தித்தால் இரண்டாவதாக ஒரு காரணம் புழப்படுகிறது!அதாவது இஸ்லாமும்,கிருத்துவமும், புத்தமும் எல்லை தாண்டிப் பரவியதற்குக் முக்கிய காரணம் அந்த மாதங்கள் பொதுவில் சமத்துவத்தை வலியுறுத்துகின்றன ( இந்த மதங்களுக்கு இந்தியா மட்டும் விலக்கு!காரணம் சமூக ஏற்றத் தாழ்வுகளில் இவர்களும் இந்துமதத்தையே ஓரளவுக்கேனும் பின்பற்றுகிறார்கள்). 
ஆனால் இந்துமதத்தின் அடிப்படையே வர்ணாசிரம தர்மத்தில் நிற்கின்றது.உலகின் எந்த ஒரு மதத்திலும் நேரடியாக இல்லாத ஒன்றை, உலக இயற்க்கை நியதிகளுக்கு முரணாக ஹிந்துமத வேதம் சொல்கிறது.இதுபோன்ற காரணத்தால் 
கண்டிப்பாக சூழ்நிலைக் கைதிகளைத் தவிர,எந்த ஒரு சராசரி மனிதனுக்கும் ஹிந்து மதத்தின் மீது ஈர்ப்பு வர வாய்ப்பில்லை!
 மூன்றாவது காரணம் ! அப்படியே யாராவது இந்துமதத்தில் சேர விரும்பினாலும் அவர்களுக்கு ஒரு குழப்பம் வரும்.அதாவது தம்மை  வர்ணாசிரம அடுக்கில் எந்த அடுக்கில் சேர்த்துக்கொள்வார்கள் என்று?காரணம்!மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்டவர்களை அவர்களும் இந்துக்கள் தான் என 1932-ஆம் ஆண்டு நடந்த பூனா ஒப்பந்தத்தில் தான் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டார்கள்.
அதிலும் பழங்குடிகள் இந்துக்களா? இல்லையா? என்ற விவாதத்திற்கு இன்னும் சமூகவியல் ஆய்வாளர்களிடம் ஒரு ஒத்த கருத்து இல்லை. சிலர் பழங்குடிகளை சமத்துவம் உள்ள தனித்த சமூக அமைப்பாக கருதுகிறார்கள்.சிலர் அவர்களை பிற்படுத்தப்பட்ட ஹிந்துக்கள் என்கிறார்கள்.இன்னும் சிலர் அவர்களை இந்து வர்ணாசிரம அடுக்கின் கடைசி வகுப்பு என்கிறார்கள்.இதுபோன்ற கருத்துக்கள் பெரும்பாலும் அவர்களை யாரும் வேறுமதத்திற்கு மதமாற்றம் செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தான் வெளியிடப்படுகின்றன. இது போன்ற குழப்பமான சூழ்நிலையில் பிராமணர்களைப் போல தங்களுக்கும் பெரிய பலன் இருக்கும் என்று நினைப்பவர்களைத்  தவிர  யாரும் ஹிந்துமதத்தை தழுவ விரும்பமாட்டார்கள்.
மற்ற மதத்தினர் அவரவர் புனித நூலைப் பற்றி சிறிதளவேனும் தெரிந்து வைத்திருப்பார்கள்.ஆனால் ஹிந்துமதம், வேதத்தை அறிந்து கொள்வதை கூட பிராமணர்களின் சிறப்புரிமையாக
வைத்திருக்கிறது.மற்றவர்களுக்கு இந்த உரிமை பல்லாயிரம் ஆண்டுகளாக மறுக்கப்பட்டதால் ஹிந்துக்களில் பெரும்பான்மையினோருக்கு ஒரு சில அடிப்படை அறிவைத் தவிர வேறொன்றும் தெரியாது.இதனால் பிராமணர்களைத் தவிர ஏனையோரால் பிரச்சாரங்களில் கூட ஈடுபடமுடியாது.
இந்துமதத்தை பரப்புவது ஒருபுறம் இருக்கட்டும்!ஆனால் சிலர் இந்துமதத்தை பாதுகாப்பதற்கு செய்யும் பிற்போக்குத்தனமான காரியங்கள் ஏறக்குறைய ஆப்கானிய தாலிபான்களுக்கும்,இவர்களுக்கும் வித்தியாசமில்லை என உணர்த்தும்.  புத்தமதம் பிராமணியத்தையும், பிராமணர்களையும் எதிர்த்து உருவானது.அதன் சமத்துவம் மற்றும் அஹிம்சை கொள்கைகளால் மாமன்னர் முதல் சாதாரண குடிமகன் வரை ஈர்க்கப்பட்டார்கள்.புத்த மதம் இந்தியாவில் வெகுவேகமாக பரவியது.அது மற்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.வேதம் சமத்துவமற்ற வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் போது புத்தமதம் சமத்துவத்தை வலியுரித்தினால்   பொறுக்குமா பிராமணர்களுக்கு? அசோகருக்குப் பிறகு இலட்சக்கணக்கானோரை கொன்றார்கள்!ஆயிரக்கணக்கான புத்த விஹாரங்கள், நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டன.அதாவது இவர்கள் தான் ஆப்கானிய தாலிபான்களுக்கு முன்னோடி என்றுகூடச் சொல்லலாம்.பாபர் மசூதி இடிக்கப்பட்டது முதல் குஜராத் கலவரம், ஒரிஸ்ஸா காந்தமாளில் கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல்கள் வரை வன்முறையின் மூலமே இந்துமதம் பாதுகாக்கப்பட்டு வருகிறது எனக் கொள்ளலாம். 
 ஜெர்மானிய சமூகவியல் அறிஞர் மார்க்ஸ் வெபர் என்ற தனது நூலில் ஏன்    ஹிந்து மதம் முதலாளித்துவ பொருளாதாரம் உருவாக சாதகமாக இல்லை என்பதற்கு இந்துமதத்தின் சில கோட்பாடுகள் முதலாளித்துவ கோட்பாடுகளுக்கு முரணாக உள்ளதை சுட்டிக்காட்டுவார்.அதாவது, வர்ணாசிரமக் கொள்கை,சமத்துவமின்மை,கர்மா,தர்மா கோட்பாடுகள்,பிறப்பின் அடிப்படையில் தொழில், ஒருவரின் சமூக நிலை அவர் பிறக்கும் சாதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது,பொருள் ஆசையைத் துறந்தால் பிறவிச் சூழலில் இருந்து  தப்பித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கூறுகிறார்.
வேதம் வலியுறுத்திய வர்ணாசிரமத்தை காந்தியும் ஆமோதித்தார்.இன்று வரை அரசியல் சாசனத்தில் மட்டுமே சமத்துவம் இருக்கிறது.ஆனால் இன்றுவரையிலும்,இந்துமதம், சமூகங்களுக்கிடையில் சமத்துவத்தை வலியுறுத்தவில்லை.தனது அடிப்படை கோட்பாட்டை சரி செய்து அனைவரையும் ஈர்க்கும் முயற்ச்சியில் ஈடுபடவில்லை.ஆனால் மிரட்டல் மற்றும் வன்முறையின் மூலம் மதமாற்றங்கள் தடுக்கும் முயற்ச்சியில் மட்டுமே ஈடுபடுகிறது.காரணம்! இருக்கும் நிலை தொடர்வதால் யாருக்கு பெரும் நன்மை என்பதை நான் சொல்லித் தெரியவேண்டாம்!

06/12/2009 பதிந்தவர் vimalavan | சமூகம் | | 2 மறுமொழிகள்

ரத்தன் டாடா-வுக்கு பிறகு யார்?

இந்தியாவின் அசைக்க முடியாத தொழில் குழுமங்களில் ஒன்றான டாடா குழுமம் இப்போது அதன் சேர்மன் ரத்தன் டாடா-வுக்கு பிறகு தலைமைப் பதவி ஏற்க ஆள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.1868- ஆம் ஆண்டு ஜாம்ஜெட்ஜி டாடாவால் ஆரம்பிக்கப்பட்ட இக்குழுமம் இன்று சுமார் 140 ஆண்டுகளைக் கடந்து உப்பு  முதல் ஸ்டீல் உற்பத்திவரை அது தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியுள்ளது.
ரூபாய் இருபத்தோராயிரம் முதலீட்டில் ஜாம்ஜெட்ஜி டாடாவால் ஆரம்பிக்கப்பட்ட டாடா குழுமம் இன்று வருட வருவாய் $71 டாலர் பில்லியன் என்ற பிரமாண்டமான அளவிற்கு வளர்ந்துள்ளது.
டாடா குழுமத்தில் மொத்தம் 98 கம்பெனிகள் உள்ளன. அதில் 27 பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது.டாடா ஸ்டீல், டாடா கன்சல்டன்சி, டாடா பவர்,தாஜ் மகால் ஹோட்டல், டாடா டீ முதலியவை மிக முக்கியமானவை.அதுமட்டுமல்லாமல் 2007-இல் சுமார்    13 பில்லியன் டாலர் தொகைக்கு  வாங்கப்பட்ட  ஆங்கிலோ-டச்சுக் கம்பெனியான    கோரசும், 2008-ஆண்டு சுமார் 2.3 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கப்பட்ட  ஜாக்குவார் லாண்ட் ரோவர் கம்பெனியும் அடங்கும்.
 டாடா குழுமத்தில் தற்போது  மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை  3,57,000 ஆகும்.இவ்வளவோ பெரிய குழுமத்தை அடுத்து ஆளாப்போவது யார்? 
தற்போது 71 வயதை கடந்துவிட்ட ரத்தன் டாடா தனக்கு பிறகு டாடா குழுமத்தை சிறப்பாக நடத்துவதற்கு ஆள் தேட ஆரம்பித்திருக்கிறார். டாடா குழுமம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரை அவரது குடும்பத்திலிருந்தே யாராவது ஒருவர் தலைமைப் பதவிக்கு வந்திருக்கிறார்கள்.ஆனால் இதுவரையிலும் தனது குடும்பத்திலிருந்து யாரையும் ரத்தன் டாடா அடுத்த தலைமைப் பதவிக்கு சுட்டிகாட்டவில்லை.தேடும் பணியை பொதுப்படையாகவே வைத்திருக்கிறார்.அடுத்த தலைவர் இந்தியாவைச் சேர்ந்தவராகவோ  அல்லது அல்லது வெளிநாட்டுவாழ் இந்தியராகவோ கூட இருக்கலாம்.டாடா குழுமத்தின் வருவாயில் 65 சதவிகிதம் வெளிநாட்டிலிருந்து வருவதால் வெளிநாடுவாழ் இந்தியரை தேர்வு செய்தாலும் நல்லது என்றும்  டாடா நினைக்கிறாராம்.
யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறதோ?

19/11/2009 பதிந்தவர் vimalavan | பொருளாதாரம் | | No Comments Yet

பிரச்சினை ஒன்று;சமூகப் பார்வைகள் இரண்டு

சாந்தி சவுந்தரராஜன்! நினைவிருக்கிறதா?கத்தார் நாட்டில் 2006-ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800-மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று, குற்றச்சாட்டின் பேரில் அவரிடமிருந்து மீண்டும் பதக்கம் பறிக்கப்பட்டது நியாபகம் இருக்கலாம்!

குற்றச்சாட்டு! அனைத்துலக தடகள அமைப்பால் அவர் பெண் இல்லை என அறிவிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதோடல்லாமல், உடனடியாக முதல் விமானத்தில் இந்திய நிர்வாகத்தால் திருப்பி அனுப்பப்பட்டார்.எண்ணி நாற்பத்தி என்டு மணி நேரத்திற்குள் அவரிடமிருந்து பதக்கம் பறிக்கப்பட்டது.அவருடன் எந்த அதிகாரிகளும் துணைக்கு வரவில்லை.இந்திய நிர்வாகத்தால் மிரட்டி அனுப்பப்பட்டார்.அனைத்துலக அளவில் அவமானப்படுத்தப்பட்ட அவர் பிறகு தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டார்.

இத்துணைக்கும் சாந்தி கத்தார் ஆசிய விளையாட்டிற்கு முன்பு ஆறு சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்.பாலினம் குறித்த பரிசோதனைகளையும் கடந்து வந்தார்.

மற்றொருவர் கெஸ்தெர் செமேன்யா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த தடகள வீராங்கனை. சமீபத்தில் 800-மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாம்பியனானவர்.இவருக்கும் பாலினம் குறித்த அதே பிரச்சினை.ஆனால் அவரிடமிருந்து பதக்கம் பறிக்கப்படவில்லை.அவருடைய நாடும் அவரை கைவிடவில்லை.ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்காவும் அவருக்குப் பின் அணி வகுத்தது.ஜோகன்னஸ்பெர்க்கில் அவருக்கு சிறப்பான வரவேற்ப்பளிக்கப்பட்டது.

அனைத்துலக தடகள அமைப்பு நிறவெறியை கடைபிடிப்பதாக தென் ஆப்பிரிக்காவினர் குற்றம் சாட்டினர்.தென் ஆப்பிரிக்க அரசு ஒரு படி மேலே போய் “கெஸ்தெர் செமேன்யா தடகளப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டால் மூன்றாம் நாடுகள் போர் தொடுக்கும்” என மிரட்டியது.

ஆனால் நாம் என்ன செய்தோம்?சாந்தி தெரிந்தே எந்த தவறும் செய்யவில்லை.
தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதார சூழலில் இருந்து வந்தவர்.பிறந்ததில் இருந்து எந்த ஒரு மரபணு பிரச்சினைகளையும் உணராதவர்.பெண்ணாகவே வளர்ந்தார்.ஆனால் நாம் கைவிட்டு விட்டோம்!

இதுவரையும் அவருடைய பிரச்சினை குறித்து விசாரிக்க எந்த ஒரு வல்லுநர் குழுவும் அமைக்கப்படவில்லை.சாதரண நடைமுறை விசாரணைகள் மட்டுமே நடந்துள்ளது.அது குறித்த முடிவுகளும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.இதுவரையிலும் யாருக்கும்  சாந்தியிடம் என்ன தவறு இருக்கிறது என தெரியாது!

எதோ தமிழ்நாடு அரசு புண்ணியத்தில் அவருக்கு பண பரிசும், வேலையும் கொடுக்கப்பட்டது.

இதில் மேலும் கொடுமை என்னவென்றால், கெஸ்தர் செமேன்யாவிடம் இருந்து பதக்கம் திரும்ப்பப் பெறப்படவில்லை.ஆனால் இந்திய நிர்வாகம் சர்வதேச தடகள சம்மேளத்திடம் எந்த ஒரு எதிர்ப்பையும் முன்வைக்காமல் நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குள் பதக்கத்தை திருப்பிக்கொடுத்து விட்டது.

அதுமட்டுமல்லாமல் கெஸ்தர் செமேன்யாவின் பாலினம் குறித்த முடிவை நவம்பர் மாதம் அறிவிப்பதாக சர்வதேச சம்மேளனம் அறிவித்திருக்கிறது.ஆனால் சாந்தியின் பிரச்சினையில் முடிவு உடனடியாக அறிவிக்கப்பட்டது.ஏன் இந்த இருவேறு நிலை?

மொத்தத்தில் சாந்திக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது!

நன்றி:டைம்ஸ் ஆப் இந்தியா

16/09/2009 பதிந்தவர் vimalavan | Uncategorized | | No Comments Yet

மாவோயிஸ்ட்டுக்களுக்கு எதிரான போரில் தோற்றுக்கொண்டிருக்கிறோம்:பிரதமர்

“மாவோயிஸ்ட்களின் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது;அதே போல,மாவோயிஸ்டுக்கள் ஏழைகளின் உரிமைகளுக்காக போராடுவதாக கூறுவதால் அவர்களுக்கான ஆதரவும் அதிகரித்துக்கொண்டே வருகிறது;நாம் மாவோயிட் களுக்கு எதிரான போரில் தோற்றுக்கொண்டிருக்கிறோம்” என பிரதமர் மன்மோகன் சிங் இன்று காவல்துறை உயரதிகாரிகளுக்கான மாநாட்டில் தெரிவித்தார்.

மாவோயிஸ்ட்டுக்களின் வன்முறையில் கடந்த இருபது ஆண்டுகளாக 6000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.மாவோயிஸ்ட்கள் மத்திய இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் நடமாடுகிறார்கள்.இன்னும் சொல்லப்போனால் பல இடங்களில் அரசு இயந்திரங்களை அவர்கள் தான் நடத்துகிறார்கள்.இடதுசாரி தீவிரவாதம் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

“மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நமது சிறப்பான நடவடிக்கைகளையும் மீறி, பழங்குடிகள்,கிராமப்புற ஏழைகள்,அறிவுஜீவிகள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது.மாவோயிஸ்டுக்களின் வன்முறையும் குறைந்தபாடில்லை.மாவோயிஸ்டுக்கள் மொத்தம் மாவட்டங்களில் செயல்படுகிறார்கள்.குறிப்பாக மத்திய பிரதேசம்,ஆந்திரபிரதேசம்,சத்திஸ்கார்,மேற்கு வங்கம்,ஜார்கண்ட், பிகார் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அவர்களின் செயல்பாடு அதிக அளவில் உள்ளது” என பிரதமர் தெரிவித்தார்.

எனவே மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

15/09/2009 பதிந்தவர் vimalavan | அரசியல் மற்றும் சமூகம் | | No Comments Yet

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு?

இந்தியாவில் 1931-ஆம் வருடத்திற்கு பிறகு பிற்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்து எந்த ஒரு கணக்கெடுப்பும் இல்லை.இடையிடையே அவ்வப்போது  இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு கமிஷன்கள் அமைக்கப்பட்டாலும், பிற்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்து 1931-க்குப் பிறகு சரியான புள்ளிவிபரங்கள் இல்லாததால், ஒவ்வொரு கமிஷன்களும் ஒரு புள்ளி விபரத்தை கொடுத்து வந்துள்ளன.மண்டல் கமிஷன் கூட, 1931-மக்கள் தொகை கணக்கெடுப்பினை பயன்படுத்தி, extrapolation  என்ற  கணிதமுறையைக் கொண்டு இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை 52-சதவிகிதம் என அறிக்கை சமர்பித்தது.

சமீபத்தில், பதினான்காவது மக்களவையின் பாராளுமன்ற குழு “பிற்படுத்தப்பட்டோர் குறித்து சரியான புள்ளிவிபரம் இல்லாமல் அரசு எவ்வாறு பிற்படுத்தப்பட்டோர் நல்வாழ்வுக்காக நிதி ஒதுக்கீடு செய்கிறது” என கேள்வி எழுப்பியது.

மத்திய புள்ளிவிபரத்துறை அமைச்சகத்தின் NSSO – சர்வே இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 35 சதவிகிதம் என குறிப்பிட்டுள்ளது.இதற்கிடையில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் குறித்து, மத்திய அரசால் 2002-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்வே, இந்தியாவில் கிராமப்புறங்களில் பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகை 38.5 சதவிகிதம் என தெரிவிக்கிறது.

இந்த புள்ளிவிபரத்தில் தமிழ்நாடு 54.37 சதவிகித பிற்படுத்தப்பட்டோருடன் முன்னிலை வகிக்கிறது.மற்ற மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை வருமாறு: உத்திரப்பிரதேசம்(51.78%), பிகார்(37%),சத்திஸ்கார்(50.37%),குஜராத்(44.83%),ஆந்திரபிரதேசம்(43.41%),இராஜஸ்தான்(46.80%),ஹரியானா(28.18%), பஞ்சாப்(20.60%),மஹாராஷ்டிரா(14.54%).

மொத்தத்தில் பதினைந்து மாநிலங்களில் பெரும்பான்மையாகவும், உத்திரகான்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் குறைவான எண்ணிக்கையிலும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலே குறிப்பிடப்பட்ட சர்வேயானது கிராமப்புறத்தை மட்டும் கணக்கில் கொண்டதாகும்.கிராமப்புறம் மற்றும் நகர்புறம் இரண்டையும் சேர்த்து மத்திய புள்ளிவிவகாரத்துறை அமைச்சின் கணக்குப்படி இந்தியாவில் பிற்பட்டோரின் எண்ணிக்கை 35% சதவிகிதமாகும்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுத் தலைவர் ஹனுமந்தராவ், ‘கிராமப்புறங்களில் பிற்பட்டோரின் எண்ணிக்கை சர்வேயில் குறிப்பிடப்பட்டதை விட அதிகமாக இருக்கக்கூடும்.எனவே பிற்படுத்தப்பட்டோர்  குறித்து சரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வேண்டும்’ என்றார்.

14/09/2009 பதிந்தவர் vimalavan | தகவல் பலகை | | 1 மறுமொழி

நேபாளத்தில் தொடரும் இந்திய பிராமண ஏகாதிபத்தியம்!

நேற்று முன்தினம், நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலில் பூஜை செய்யச் சென்ற இந்திய பூசாரிகள் ராகவேந்திரா பாட்டாவும்,கிரிஷ் பாட்டாவும்(இருவரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்) , இந்திய பூசாரிகள் Pashupatinath_Overviewஎதிர்ப்பு போராட்டக் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் அவர்கள் இருவரும் பலத்த பாதுகாப்புக்கிடையில் பசுபதிநாத் கோவிலில் பூஜை செய்துள்ளனர்.இந்தத் தாக்குதலுக்கு நேபாள அரசின் சார்பிலும்,இந்திய அரசின் சார்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பசுபதிநாத் கோவிலில் இந்திய பூசாரிகள் பூஜை செய்யும் வரலாறு குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகிறது.அதாவது, இந்தக் கோவிலில் பூஜை செய்பவர்கள் பொதுவாக தென்னிந்தியாவைச் சேர்ந்த பிராமணர்கள்!இந்த நடைமுறையானது, அப்போது ஒருங்கிணைந்த பாரதம் வேண்டி வலியுறுத்திய ஆதிசங்கரரின் வேண்டுகோளின்படி கி.பி.ஆறாம் நூற்றாண்டில், நேபாள மன்னர் ‘யக்ஷ  மல்லா’வால் ஆரம்பிக்கப்பட்டதாக ஒரு வரலாறு உள்ளது.

மற்றொரு கருத்தானது,  மன்னர் இறந்தால் நேபாளத்தில் ஒருவருடம் துக்கம் கடைபிடிக்கப்படுமாம்!.அவ்வாறு துக்கம் கடைப்பிடிக்கப்படும் போது யாரும் ஒரு வருடத்திற்கு கோவில் பூஜைகளில் ஈடுபட முடியாதாம்.அதனால் அப்போதிருந்த மன்னர் இறந்ததால், நேபாள பூசாரிகள் பூஜையில் ஈடுபட முடியவில்லை.இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க, கோவிலில் பூஜைகளை அந்த ஒருவருட காலத்திற்கு தொடரும் பொருட்டு,இந்திய பூசாரிகள் அங்கு வந்ததாகவும், அதுவே பின்பு நடைமுறையானதாகவும் கூறப்படுகிறது.

பசுபதிநாத் கோவிலில் நெடுங்காலமாக இருந்துவந்த இந்த முறையை மாற்றி, முந்தைய நேபாள மாவோயிஸ்ட் அரசு, மண்ணின் மைந்தர்களை கோவில் பூசாரிகளாக நியமித்தது. இதை எதிர்த்து நேபாள உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்திய பூசாரிகளே நீடிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.இருப்பினும் இந்திய பூசாரிகளை மாற்றக்கோரி ஒரு போராட்டக்குழு போராட்டத்தை தொடர்ந்து வருகிறது.இந்தப் போராட்ட குழு தான் இந்திய பூசாரிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக் கூறப்படுகிறது

இப்போது மன்னராட்சியும் இல்லை.அதனால் மன்னர் இறந்தால் ஒரு வருடம் யாரும் கோவில் வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடாது என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டிய அவசியமும் இப்போது இல்லை.

இந்த நடைமுறையானது, முந்தைய  நேபாள மன்னருக்கும், ஆதி சங்கரருக்கும் இடையிலான புரிந்துணர்வினால் கொண்டுவரப்பட்டது என்றாலும், மன்னராட்சி இல்லாத மக்களாட்சி உள்ள இந்த தலைமுறையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை.இந்த நடைமுறையானது சில காரணங்களுக்காக இடையில் கொண்டுவரப்பட்டது.இப்போது மக்கள் மாற்றத்தை விரும்பும் போது அதை ஏன் இந்திய நேபாள அரசுகள் தடுக்க வேண்டும்?

இந்திய பூசாரிகளைப் போல கற்றறிந்த பூசாரிகள் நேபாளத்தில் இருக்கும் போது, ஏன் இந்திய பூசாரிகள் வழிபாட்டு நடைமுறைகளை இன்னும் தொடரவேண்டும்? 

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை விரட்டுவதற்கு நமக்கு எப்படி உரிமை இருந்ததோ, அதேபோல் ஏன் இந்திய பிராமண ஏகாதிபத்தியத்தை நேபாளத்தில் இருந்து விரட்டுவதற்கு நேபாள் மக்களுக்கு உரிமை இல்லை?நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவிலில், நேபாள பூசாரிகள் தான் பூஜை செய்யவேண்டும் என நேபாள மக்களில் ஒரு பிரிவினர் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? 

கேட்டால், இந்திய பிராமண பூசாரிகள் பூஜை செய்வது தான் மரபாம்!இப்படி மரபு மரபு என்று சொல்லியே கோடிக்கணக்கான மக்களை, ஆயிரக்கணக்கான வருடங்கள் அறியாமை இருளில் வைத்தவர்களிடம் மற்றம் வேண்டி நேபாள் மக்கள் போராடுவதால் நியாயம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஏற்கனவே இந்திய எதிர்ப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இந்தியா, நேபாள விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது இந்த எதிர்ப்புணர்வை அதிகரிக்கத் தான் செய்யும்!

06/09/2009 பதிந்தவர் vimalavan | பொதுவானவை | | No Comments Yet

இரு சோதனைகள்;இருவேறு கோணங்கள்

அறிவியல் பற்றி அறிந்துகொள்ள தயங்குபவர்கள் கூட இந்த இரண்டு சோதனைகள் பற்றி அறியாமல் இருக்கமாட்டார்கள்.காரணம்! அவ்வளவு விளம்பரங்கள்,ஊடகச் செய்திகள், விவாதங்கள்  இந்தியாவில் chandrayaan_10NUCமட்டுமல்ல;உலகம் முழுவதிலும். ஒன்று! அணுகுண்டு சோதனை செய்து புவியை அதிர வைத்தது;மற்றொன்று! நிலவுக்கு விண்கலம் அனுப்பி விண்ணுலகையும் மண்ணுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது!

இந்த இரு சோதனை வெற்றிகளாலும் சராசரி இந்தியன் தனது சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டது  உண்மை!அதே நேரம் அண்டைநாடுகளும், மேற்கு நாடுகளும் மண்டை காய்ந்ததும் உண்மை!

இந்நிலையில்  இந்த இரு சோதனைகள் குறித்தும் அறிவியல் மற்றும், அரசியல் வட்டாரத்தில் நடைபெறும் விவாதங்கள், தினந்தோறும் வரும் ஊடகச் செய்திகளால், விஞ்ஞானிகளின் நம்பகத் தன்மை குறித்து சராசரி இந்தியனுக்கு சந்தேகம் வருவது இயல்பு!

போக்ரான்-2  அணுகுண்டு சோதனை முழுமையாக வெற்றிகரமாக அமையவில்லை என அணு விஞ்ஞானி சந்தானம் முதல் சர்ச்சையைக் கிளப்பினார்.அவருக்கு ஆதரவான அணியினர் இதை உண்மை என்று ஒப்புக்கொண்டதோடல்லாமல், இந்தியா மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.ஆனால், அப்துல்கலாம் தலைமையிலான அணியினர் ‘போக்ரான்-2 அணுகுண்டு சோதனை முழுமையான வெற்றி எனவே மீண்டும் அணுகுண்டு சோதனை தேவையில்லை’ எனக் கூறுகின்றனர்.

எது உண்மை என மண்டையை குடைவதற்குள், நிலவை ஆராய அனுப்பப்பட்ட சந்திராயன் விண்கலத்தின் ரேடியோ தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரோ அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறது.சென்ற மாதம் சந்திராயனில் இருந்த ‘சென்சார்’ செயலிழந்து விட்டதாக கூறினார்கள்.இருந்தும் பிரச்சினை ஒன்றுமில்லை என்றார்கள்.இப்போது நிரந்திரமாக செயலிழந்து போய்விட்டதை சொல்லாமல் சொல்கிறார்கள். இரண்டு ஆண்டுகால பணிக்காக அனுப்பப்பட்ட சந்திராயன் விண்கலம், ஒரு ஆண்டிலேயே 90 முதல் 95 சதவிகித பணிகளை (காதில் பூ?) பூர்த்தி செய்துவிட்டதாம்!

இரண்டு திட்டங்களுக்கும் எவ்வளவு பணம் செலவாகியிருக்கும்?போக்ரான்- 2 திட்டம் பாதுகாப்பு சம்பந்த்தப்பட்டதால் எவ்வளவு செலவானது என மக்களுக்கு தெரியாது.ஆனால் சந்திராயன் திட்டத்திற்கு ஆனா செலவு 3.8 பில்லியன் ரூபாய்கள்!இது இதே திட்டங்களுக்கு அமெரிக்கா,சீனா மற்றும் ஜப்பான் செய்த செலவைவிட பலமடங்கு குறைவு எனக் கூறப்படுகிறது.

நாட்டில் முப்பது கோடிக்கும் மேற்பட்டோர் ஒருவேளை சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிக்கிறார்கள்,ஆயிரக்கணக்கான விவசாயிகள் வருடந்தோறும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்,கோடிக்கணக்கான குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் தவிக்கிறார்கள்,கோடிக்கணக்கான பேருக்கு மருத்துவம்,கல்வி,மின்சாரம், குடிநீர் வசதிகள் இல்லை,தாய்-சேய் இறப்பு விகிதங்களை இன்னும்குறைக்க முடியவில்லை,பன்றிக் காய்ச்சல்  போன்று புதிது புதிதாக வரும் நோய்களை தடுக்க முடியாமல் தவிக்கிறோம். இப்படி இருக்கும் ஒரு நாட்டிற்கு இதுபோன்ற செலவீனங்கள் சரிதானா? என சமூக அக்கறைகொண்ட கொண்ட பலரால் வைக்கப்படும் விமர்ச்சனத்திலும் உண்மையில்லாமல் இல்லை!

இன்னொருபுறம் பார்த்தால், இந்த இரண்டு பரிசோதனைகளும், உலக நாடுகளை இந்தியாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தன! அணுகுண்டு சோதனைகளை விமர்ச்சனம் செய்திருந்தாலும் கூட, இந்தியாவை தவிர்க்க முடியாத சக்தி என வளர்ச்சியடைந்த நாடுகள் புரிந்துகொண்டன.

அது அமெரிக்காவாக இருந்தாலும்,ரஷியாவாக இருந்தாலும்,ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் அல்லது சீனாவாக இருந்தாலும் சரி அறிவியல் பரிசோதனைகளில் வெற்றி தோல்விகள், குறைபாடுகள் சகஜம் தான்.இது தேவை இல்லாத செலவு என இஸ்ரோ மீது ஒவ்வொரு காலகட்டத்திலும் விமர்ச்சனம் உண்டு.ஆனால் இஸ்ரோ அனுப்பிய செயற்கைக் கோள்களால் சமூக,பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு புரட்சிகள்/மாற்றங்கள்  ஏற்பட்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது!

29/08/2009 பதிந்தவர் vimalavan | அறிவியல் | | No Comments Yet