முகப்பு > சிந்தனை > உலகம் மாவோயிஸ்டுகள் காணும் கனவை விட பெரியது

உலகம் மாவோயிஸ்டுகள் காணும் கனவை விட பெரியது

சத்திஸ்கார் மாநிலத்தின் தண்டேவாடா பகுதியில் எழுபத்தைந்து CRPF போலீசார் நக்சலைட்டுகளால் படுகொலை செய்யப்பட்டது, இந்தியா முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.நக்சல்களுக்கும்,பாதுகாப்பு போலீசாருக்கும் இடையே நடக்கும் சண்டையில் இரு தரப்பிலும் ஆட்கள் கொல்லப்படுவது அவ்வப்போது நடப்பது தான் என்றாலும், சமீபத்தில் கொல்லப்பட்ட போலிசாரின் எண்ணிக்கை அனைவரையும் உறையவைத்தது.அரசுத் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்க, பிரதமர்,உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புதுறை  வல்லுனர்களுக்குள் பலத்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.அதாவது இப்போதைய அரசின் வியூகம் பதிலடி கொடுப்பது என்பதையும்  விட,  நக்சல்களை மூன்று நான்கு வருடத்திற்குள் முற்றிலுமாக ஒழித்து விடுவது என்பதாக இருக்கிறது.உள்துறை அமைச்சர் சிதம்பரமும் இதனை நக்சல்களுக்கு எதிரான போர் என அறிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, இந்திய மாவோஸ்டுகள் 2050-ஆம் ஆண்டுக்குள் ஆயுதப் புரட்சியின் மூலம் மாவோஸ்ட் கம்யுனிச ஆட்சியை ஆட்சி அமைக்க விரும்புவதாக அறிவித்துள்ளார்கள்!ஆனால் உலகம் மாவோஸ்டுகள் காணும் கனவை விட பெரியது!

காரணம்! உலகம் ஜனநாயகம், மக்களாட்சி தத்துவங்களையே சிறந்ததாக கருதி வாழ பழகிகொண்டுவிட்டது!நேபாளில் கூட மாவோயிஸ்டுகளால் ஜனநாயக பாதையையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம்!மாவோ சொன்னது போலவோ அல்லது மார்க்ஸ் சொன்னது போலவே ஒரு ஐடியல் கம்யுனிச சமுதாயத்தை அமைக்க முடியாது.உலகில் இதுவரை இருந்த கம்யுனிச அரசுகளும் முழுமையாக அவர்களின்  சிந்தாந்தப் படி அமையவும் இல்லை!ரஷ்யா முதற்கொண்டு ஐரோப்பாவிலிருந்த கம்யுனிச நாடுகளினால் கூட கம்யுனிச சித்தாந்தத்தை தொடர முடியாமல் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிவிட்டார்கள்.கம்யுஸ்ட் ஆட்சி பல நாடுகளில் உருவானாலும் கூட அவற்றின் நிலைத் தன்மை கேள்விக்குறியது.சீனாவில் ஒரு கட்சி கம்யுனிச ஆட்சி இருந்தாலும், அங்கும் சமத்துவம் இல்லை.ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.மனித உரிமை பற்றி அங்கு பேசவே கூடாது.அரசு அதிகாரிகளிடையே ஊழலுக்கும் பஞ்சமில்லை.எனவே கம்யுனிச அரசு என்பது அடிப்படையில் ஒரு கட்சி ஆட்சி என்பதை  தவிர நடைமுறையில் மற்ற நாடுகளைப் போல தான். அதுவும் நக்சல்கள் அவர்கள் கூறுவதை போல 2050-இல் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தாலும், காலப்போக்கில் ஒன்றும் பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை!அப்போதும் ஏழைகள் இருப்பார்கள், முதலாளிகள் சுரண்டிக்கொண்டே தான் இருப்பார்கள்! என்ன கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்!.அவ்வளவு தான்!

நக்சல்களின் பெரிய பலம்! நக்சல்கள் பிரச்சினை என்று வரும்போது மக்களுக்கு உருவாகும், அவர்கள் செய்வது சரியா? தவறா? என்ற குழப்பமான மனநிலை!பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக எழும் ஒருமித்த கருத்து அல்லது ஆவேசம்  இந்தியாவில் நக்சல்களுக்கு எதிராக எழுவதில்லை!காரணம்!அவர்கள் தங்களை யாருடைய பிரதிநிதிகளாக காட்டுகிறார்களோ அந்த மக்களின் உண்மை நிலை நம்மை சுடுகிறது!நமக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது!

எங்கெல்லாம் மாவோஸ்டுகள் குறிப்பாக வளர்ந்திருக்கிறார்கள்?.அரசுகளின் மெத்தனப் போக்கினால்,பாராமுகத்தால் எங்கெல்லாம் வறுமை தலைவிரித்தாடுகிறதோ,எங்கெல்லாம் முதலாளிகள்,கந்துவட்டிக்காரர்கள்  மற்றும் அரசு அமைப்புகளால் விளிம்பு மனிதர்கள் வஞ்சிக்கப்படுகிறார்களோ அல்லது சுரண்டப் படுகிறார்களோ அங்கெல்லாம் நக்சல்கள் வளர்ந்திருக்கிறார்கள்! அதை அரசுகள் முதல் சமூகவியலாளர்கள் வரை அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.நக்சலிசம் உருவாக கூறப்படும் அனைத்து காரணங்களும் மறுக்க முடியாதவை.அரசுகள் முதலாளிகளுக்கு  முன்னுரிமை கொடுப்பதற்காக ஏழைகளை, பழங்குடிகளை காலம் காலமாக வஞ்சித்து வருகிறார்கள் என்பதும் வெட்கப்பட வேண்டியது  தான். நக்சல்கள் வளர்ந்த பகுதிகள் காலம் காலமாக வளர்சிப்பனிகளில் இருந்து புறக்கணிக்கபட்டன என்பதும் நூறு சதவிகிதம் மறுக்க முடியாதது தான்! 

நக்சல்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்!இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை, அடிப்படையில் அடித்தட்டு மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்டவை! என்ன!நக்சல்கள் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள்.அவர்கள் ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்கள் வளரும் போது கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன்  காப்பாற்ற முடியவில்லை.காரணம் நடைமுறை அரசியல் கொஞ்சம் கடினமானது!கடைசியில் நம்மால் அடித்தட்டு வர்க்கத்திலிருந்து சில முதலாளிகளை உருவாக முடிந்ததே தவிர ஏழைகள் ஏழைகளாகவே இருக்கிறார்கள்!இதில் உங்களுக்கும் விதிவிலக்கிருக்கப் போவதில்லை!ஆனால் ஜனநாயகத்தில் ஒருவரால்  வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவும் முடியும்.இல்லை என்றால் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவாவது முடியும்!

எத்தனையோ தலைவர்களை நாம் உண்மையான சமூக புரட்சியாளர்களாக நம்பியிருக்கிறோம்.கடைசியில் அவர்களெல்லாம் தங்களது சாதிக்குள் அல்லது சாதி அடையாளத்திற்குள் கரைந்து போயிருக்கிறார்கள் அல்லது சாதி அபிமானிகளால் கரைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு!

அதிலும் இந்திய சமுதாயம் ஐரோப்பிய சமுதாயம் போல ஏழை, பணக்காரன் என்ற கட்டமைப்பை கொண்டதல்ல;இது சாதிய வலைப்பின்னலாளான  முரண்பாடுகளின் மொத்த உருவம்.இதில் சோதனை முயற்ச்சிகள் வேதனையைத் தான் தரும்.
 
எனவே! நக்சல்கள் ஆயுதப் புரட்சியைக் கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புவதே நல்லது!
படைவீரர்கள் கொல்லப்பட்டாலோ அல்லது காயம்பட்டாலோ அவர்கள் குடும்பத்தினை பாதுகாக்க அரசு இருக்கிறது.ஆனால் நக்சல்களின்  வன்செயல்களுக்கு பதிலடி கொடுக்க பொலிசாரால் துன்புறுத்தப்படும் அல்லது கொல்லப்படும் உறவினர்களுக்கு அல்லது ஆதரவாளர்களை பொருளாதார ரீதியாக பாதுகாக்க யார் இருக்கிறார்கள்?
Categories: சிந்தனை
  1. 10:50 மு.பகல் இல் 08/04/2010 | #1

    அருமயான கட்டுரை.

    //நக்சல்கள் ஆயுதப் புரட்சியைக் கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புவதே நல்லது!// சரியாகச் சொன்னீர்கள்!

  1. No trackbacks yet.

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.