மனிதர்கள் என்ற போர்வையில் …!
கடந்த சில வருடங்களை திரும்பிப்பார்த்தால் புரியும், தமிழகம் எத்துணை பிற்போக்குத்தனமான தலைவர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்று! தலித்துகளை ஏமாற்றுவது, அவர்களின் உழைப்பை உறிஞ்சி சமூகத்தில் பெரிய கை-யாக வலம் வருவது எல்லாம் இன்னும் தொடரும் இறந்த காலம் என்றாலும், இதன் நவீன வடிவம் தான் தலித்துகளுக்கு எதிராக அரசியல் செய்து அதிகாரம் பெறுவது அல்லது தலித்துகளுக்கு எதிராக அரசியல் செய்து தங்களை ஆதிக்க சாதிகளின் தலைவர்களாக முன்னிறுத்துவது!
ஆதிக்க சாதி ஆண்கள், ஆதிக்க சாதிகளுக்கிடையே அல்லது தங்களைவிட மேல்சாதி பெண்களை காதலித்தால் அது உண்மை காதல்! இதையே ஒரு தலித் இளைஞர் செய்தால், அது நாடக காதலாம் !அதாவது, தலித் இளைஞர்கள் , மேல்சாதி பெண்களை நாடக காதல் செய்து, அவர்களின் பெற்றோரிடம் இருந்து பணம் பறிக்கிறார்களாம் அல்லது பணத்தை குறிவைத்து ரகசிய திருமணம் செய்து கொள்கிறார்களாம்! இது டாக்டர் இராமதாஸ் போன்ற பிற்போக்குவாதிகளின் தொடர்ச்சியான குற்றச்சாட்டு !
பணத்திற்கு ஆசைப்பட்டு , சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்வது எல்லாம் ஆதிக்க சாதிகளில் காலம் காலமாக உள்ள அடிப்படை பண்புகளில் ஒன்று! ஆதிக்க சாதிகளில் நடைபெறும் தொண்ணூறு சதவிகித திருமணங்கள் பணம் மற்றும் சொத்து அடிப்படையிலேயே நடக்கிறது. இந்த பணம், சொத்து மற்றும் அதிகார, ஆதிக்க வெறி இருப்பதாலேயே அவர்கள் ‘ஆதிக்க சாதிகள்’! இது அனைவருக்கும் தெரிந்த உண்மை !தலித் இளைஞர்கள் மேற்கூறிய காரணங்களுக்காக நாடக காதல் செய்வதாக கூறுவதில் எந்தளவு உண்மை இருக்கிறது ?
மேல்சாதி பெண்களை மயக்கி தலித் இளைஞர்கள் காதலிக்கிறார்கள் என்பதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன? மேல்சாதி பெண்கள் எவ்வளவு படித்திருந்தாலும் அவர்களுக்கு சுய அறிவு குறைவு என்ற ஆணாதிக்க சிந்தனை! இந்த பெண்ணடிமைவாதிகள் தான் தற்போது “பெண்களின் பாதுகாப்பும், ஐ.நா., ஒப்பந்தங்களும்….தமிழ்நாட்டில் செய்ய வேண்டியது என்ன?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துகிறார்களாம் . பயிரை மேயும் இந்த வேலிகள் (ஆணவக்கொலைகாரகள்) தான் பெண்களின் பாதுகாவலர்களாம் ! எவ்வளவு பெரிய போலித்தனம் ?.
இருபதுகளில் உள்ள எந்த எந்த இளைஞருக்கும் காதல் என்பது ஒரு மன அல்லது உடல் சார்ந்த எதார்த்த உணர்வு . சக மனிதனைப்போல எதார்த்தமாக வாழ்க்கையை நினைக்கும் தலித் இளைஞன், இந்த பிற்போக்குவாதிகளின் கொடூரம் அறியாதவன். அவர்களுக்கு ‘நாடகக் காதல்’ செய்யும் அளவுக்கு அனுபம் கிடையாது. சிலரை பணம், சொத்து மற்றும் உடல் ரீதியாக பயன்படுத்திக்கொள்ளும் ‘மேல்சாதி’ மனநிலை தலித்துகளுக்கு இருந்திருந்தால் அவர்கள் எப்போதோ மற்றவர்களைவிட சமூக பொருளாதார ரீதியாக முன்னேறியிருப்பார்கள்.ஆதிக்க மற்றும் மேல்சாதி பெண்ணை காதிலிப்பதோ அல்லது திருமணம் செய்வதோ தலித் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டுவருவதில்லை. அதுவே சமூக அடுக்கின் மேல்நோக்கிய நகர்வுக்கான(upward mobility) அடிப்படையும் இல்லை.அது ஒரு எதார்த்தமான வாழ்க்கை.
ஒருவர் தன்னை விரும்புபவரை காதலிப்பது அல்லது திருமணம் செய்வது என்பது வாழ்க்கையின் எதார்த்தம். அதற்க்கு வேறெந்த ‘நாடக’ காரணமும் இருக்க அடிப்படையில்லை.அப்படி ‘நாடக’ காரணம் இருந்தால், அது ஆதிக்க அல்லது மேல்சாதி கலாச்சாரமாகவோ அல்லது மனநிலையாகவோதான் இருக்க முடியும். அது நூறு சதவிகிதம் தலித் கலாச்சாரமோ அல்லது தலித் மனோநிலையோ அல்ல.அது தனி நபர் மீதான மேல்சாதி அல்லது ஆதிக்க சாதியின் கலாச்சார தாக்கமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
தலித்துகள் உழைப்பாளிகள் மட்டுமல்ல; மற்றவர்களால் பல காரணங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளப்படுபவர்கள்! வஞ்சிக்கப்படுபவர்கள்!எதிர்நிலையில் இருந்து , டாக்டர் இராமதாஸ் போன்றவர்கள் ‘நாடக காதல்’ அரசியல் செய்வதற்கும் தேவைப்படுகிறார்கள். தலித்துகளை காதல் திருமணம் செய்வது பிற்போக்கு ஆதிக்க சாதியினருக்கு கேவலமாக இருந்தால் , தலித்துகளுக்கு எதிராக அரசியல் செய்து அதிகாரம் பெற நினைப்பதும் அதைவிட கேவலமானதல்லவா?
மனிதர்கள் என்ற போர்வையில் உள்ள சில ஆதிக்க மிருகங்கள் தங்களை காலம் காலமாக, தங்களின் சுயநலத்திற்காக, உண்மைக்கு புறம்பாக , அவமானப்படுத்துவதை தெரிந்தே தான் தலித்துகள் தங்கள் வாழ்க்கையை தினந்தோறும் நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து எல்லோருடைய வலியையும் காலம் காலமாக தாங்கும் அவனுக்கும் தெரியும்! மாற்றம் ஒன்றே மாறாதது என்று!
ஆண்டோர் ஆண்டிகளானால் ..!(ஒரு வரலாற்றுப் பார்வை )
நாங்கள் தான் உயர்ந்த சாதி!நாங்கள் வர்ணாசிரம அடுக்கில் பிராமணர்களுக்கு சமமானவர்கள்!இல்லை!இல்லை!நாங்கள் தான் உண்மையான சத்திரியர்கள்!நாங்கள் ஆண்ட பரம்பரை!நாங்கள் வைசியர்கள்! பிரம்மாவுடனும், விஷ்ணுவுடனும் கற்பனையாக தொடர்புபடுத்திக்கொண்டு, மிகைப்படுத்திய வரலாறுகளை தங்கள் சாதிகளுக்கு என்று உருவாக்கினார்கள்!
இந்தக் கூத்தெல்லாம் நடந்தது 1872-ஆம் ஆண்டு முதல் 1931-ஆம் ஆண்டு வரையிலும் . எதற்காக?. எப்பொழுது முதன் முதலாக இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினார்களோ, அப்போதிலிருந்து 1931-வரை ஆங்கிலேய அரசு வர்ணாசிரம அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினார்கள்.ஒவ்வொரு சாதிக்காரர்களும் தங்களை மேலான வர்ணாசிரம அடுக்கில் வைக்கச் சொல்லி மனுக்கொடுத்தார்கள் .அவ்வாறு தங்களை மேலான வர்ணாசிரம அடுக்கில் சேர்க்க வேண்டும் என்றால், அவர்கள் தங்கள் சாதி மக்களின் எண்ணிக்கை,மத ரீதியான கற்பனை வரலாறு, முதலானவற்றை தெரிவிக்க வேண்டும்.கடைசியில், ஆங்கில அரசு அதிகாரத்தில் எப்பொழுதும் ஒட்டிக்கொண்டிருந்த பிராமணர்கள், யாரை எந்த வர்ணாசிரம அடுக்கில் வைக்கவேண்டும் என ஆங்கிலேய அரசுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.ஒவ்வொரு சாதியினரும் தங்கள் எண்ணிக்கையைக் கூடுதலாக காண்பிக்க, தங்களின் சாதி மற்றும் கிளை சாதிகளை தேடி அலைந்தார்கள்.வெள்ளைக்காரர்கள் முன்பு தங்களை பிரமாண்டமாக காட்டிக்கொண்டார்கள். இதுபோன்ற உள்குத்துக்கள் நடப்பதை அறிந்திராத பல சாதிகள் கீழான வருணாசிரம நிலைக்கு சபிக்கப்பட்டார்கள்!
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான், சில ஆண்ட மிட்டா மிராசுகளுக்கு தங்களின் முதிர்ச்சியின்மை புரிய ஆரம்பித்தது. தங்களின் தனிப்பட்ட செல்வந்த நிலையோ அல்லது மேம்பட்ட வருணாசிரம நிலையோ வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தில் அதிகாரம் பெற அல்லது தங்களின் அதிகாரத்தை நீட்சி செய்ய போதுமானதாக இல்லை என உணர்ந்தார்கள்.
மறுபுறம், வருணாசிரம நிலை காரணமாக தொன்று தொட்டு பிராமணர்கள் பெற்ற கல்வி, ஆங்கிலேய அதிகார மையத்தில் ஒட்டுமொத்தமாக குறிப்பிடத்தக்க அதிகாரம் பெற உதவியது. பிராமணர்கள் இந்த அதிகாரங்களை ஒரு குழுவாக சுய வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டதோடு, வருணாசிரம அடுக்குகளை திடப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்தினார்கள். பிராமணர்கள் வலுவான அதிகார மையமாக உருவானார்கள். மற்ற பிரிவினருக்கு பயனற்ற பிராமண அமைப்புகள் மற்றும் பிராமண அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகள், பிராமணர்கள்- மற்றவர்கள் என்ற கசப்பு நிலையை ஏற்படுத்தியது.
அதுவரை பொருளாதார காரணங்களுக்காக அதிகார வர்க்கமான மிட்டா மிராசுகளை நாடி நின்ற பிராமணர்களை, மிட்டா மிராசுகள் நாடிச்செல்ல வேண்டிய கட்டாயம் ஆங்கிலேய ஏகாதிபத்திய காலத்தில் ஏற்பட்டது. தலைமுறை தலைமுறையாக அதுவரை அதிகார கோலோச்சிய செல்வந்த மிட்டா மிராசுகளுக்கு இந்த நிலையை கையாள்வதில் இருந்த உளவியல் சிரமம், பிராமணர்கள் மீது அதீத கசப்பு உணர்வை வளர்த்தது.
அதுவரை தனது சாதியினரையோ, மற்றவர்களையோ பற்றி பெரிதும் கவலைப்படாத மிட்டா மிராசுகளுக்கு, தனது சாதியினரையும் மற்ற ஆதிக்க சாதியினரையும் ஒருங்கிணைத்து பிராமண அதிகார அமைப்புகளுக்கு எதிராக போராட வேண்டிய கட்டாய நிலையை ஏற்படுத்தியது .
முதிர்ச்சியில்லாமல் மேலான வர்ணாசிரம நிலையைப் பெறுவதை விட, தங்களை சூத்திரர்களாக அடையாளப்படுத்தி , கல்வி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெற்று, ஆங்கில அரசில் அதிகாரம் பெறுவதே எல்லாவகையிலும் பயனுள்ளது என மிட்டா மிராசுகள்ஆழம் பார்த்து காலை விட ஆரம்பித்தார்கள். மிட்டா மிராசுகள் ஆதிக்க சாதியினரை சூத்திரர்களாக ஒருங்கிணைத்தாலும் ,பெரும்பான்மையானவர்களின் சமூக பொருளாதார நிலை, கல்வி- வேலைவாய்ப்பில் பிராமணர்களுடன் போட்டிபோடும் நிலையில் இல்லை. என்ன செய்தார்கள் ? கல்வி , வேலை வாய்ப்புகளில் பிற்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவர ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசிடம் போராடி வெற்றி பெற்றார்கள். இது தான் இன்று ஆண்ட பரம்பரைகளாக சொல்லிக்கொள்ளும் பல ஆதிக்க சாதிகள் தென்னிந்தியாவில் சட்டப்பூர்வமாக ஆண்டிகளான கதையின் தொடக்கம்.
வரலாற்றுப் பார்வை தொடரும் …
குற்றவாளிகள் ஏன் பெரும்பாலும் அடித்தட்டு வர்க்கத்தில் இருந்தே வருகிறார்கள்?
சிறிய குற்றமோ அல்லது பெரிய குற்றமோ;அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி இல்லை இந்தியாவாக இருந்தாலும் சரி; குற்றவாளிகளை தேடும் பணி முதலில் ஆரம்பிப்பது அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் தான்.அமெரிக்காவாக இருந்தால் கருப்பர்கள் வாழும் பகுதிகளில் குற்றவாளிகளை தேடுவார்கள்.இந்தியாவாக இருந்தால் எங்காவது குப்பத்தில் தேடுவார்கள்.
ஏன்?குற்றவாளிகள் குப்பத்தில் தான் இருக்க வேண்டுமா?ஆமாம் போலிசின் உளவியல் அப்படித்தான் சொல்கிறது.
அதுபோல,இவர்கள் செய்யும் சிறு சிறு குற்றங்களுக்கும் கூட தண்டனை எப்படி இருக்கும் என சொல்லித்தெரிய வேண்டியதில்லை.சிறு திருட்டாக இருந்தாலும் சரி, அல்லது கொலைகுற்றமாக இருந்தாலும் சரி, அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக உச்ச பட்சம் துன்புறுத்தப்படுவார்கள்.அதிகபட்சமாக ரவுடி என்று முத்திரை குத்தப்பட்டு எண்கவுண்டரில் கூட கொல்லப்படுவார்கள்.இவர்கள் தண்டனை பெரும் வகையில் குற்றங்கள் ஜோடிக்கப்படும்.
காவல்துறை ரெக்கார்டுகளில் தேடினாலும் சரி,அரசு புள்ளி விபரங்களிலும் சரி,பெரும்பாலும் குற்றவாளிகள் அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.காரணம் என்ன?இவர்கள் தான் மென்மையான இலக்குகள்!இல்லாதவர்கள் என்றால் எல்லாவகையிலும் இவர்கள் இல்லாதவர்கள்!பணக்காரர்கள்,அதிகாரவர்க்கத்தினர் அல்லது சமூகத்தில் பெரிய இடங்கள் எனக் கூறப்படுபவர்களை எல்லாம் குற்றத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இந்த சமூகம் பார்க்க பழகிகொண்டிருக்கிறது.
போலிஸ் ரெகார்டுகள் அல்லது அரசு புள்ளிவிபரங்கள் சொல்வதெல்லாம் உண்மையா?உண்மையில் குற்றவாளிகள் குப்பங்களில் இருந்து தான் வருகிறார்களா?உண்மை அதுவல்ல!
ஆதிக்க சக்திகளின் குற்றங்களை போலீசார் தொண்ணூறு சதவிகிதம்பதிவு செய்வதில்லை.அப்படியே பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்குகள் கோர்ட் படி ஏறாது.அப்படியே கோர்ட் படி ஏறினாலும் பெரும்பாலும் குற்றங்கள் நிரூபிக்கப்படுவதில்லை.அப்படியே குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் அவர்கள் தண்டனை பெறுவது சந்தேகம்.அப்படியே தண்டனை பெற்றாலும் அவை ஒன்றும் குப்பத்து திருடனுக்கு வழங்கப்பட்ட அளவு கூட இருக்காது.மொத்தத்தில் அரசு இயந்திரங்கள் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக இருக்கும்.மீண்டும் போலீசார் குற்றவாளிகளை தேடி குப்பத்தை நோக்கி செல்வார்கள்!
‘பெட்டி’ திருடனிடம் காட்டும் அதிகாரத்தை இவர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கும் அதிகார, ஆதிக்க சக்திகளிடம் காட்டமாட்டார்கள்.தினந்தோறும் கோடிக்கணக்கில் வரி எய்ப்பு நடக்கிறது;கோடிக்கணக்கில் ஊழல் நடக்கிறது;கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மோசடி நடக்கிறது.இவர்கள் செய்யும் கொலை,கற்பழிப்பு சம்பவங்களுக்கும் பஞ்சமிருக்காது!ஆனால் என்றாவதுதான் ஒரு வழக்கை பதிவு செய்வார்கள்;அது அன்றே நமது ஞாபக மறதியில் கரைந்து போகும்!
ஆதிக்க சக்திகள் செய்யும் குற்றங்கள் நம் கண்முன்னே தினந்தோறும் ஆயிரக்கணக்கில் நடக்கிறது.ஆனாலும் நாம் விலகிச் செல்கிறோம்.நம் ஞாபக மறதி ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவே இருக்கிறது. குப்பத்து மனிதனை குற்றவாளியாக்க நம் மனது பழகி கொண்டுவிட்டது.!
ஒவ்வொரு தமிழருக்கும் உள்ள கடன் எவ்வளவு?
தமிழக சட்டசபையில் நடந்த பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிதியமைச்சர் அன்பழகன் பேசியதாவது:
தமிழக சட்டசபையில், பட்ஜெட் மீதான பொது விவாதம் நேற்று முடிந்தது. அதற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:
தனிநபர் கடனை பொறுத்தவரை, மராட்டியத்தில் ஒரு நபருக்கு ரூ.18,575 ம், ஆந்திரத்தில் அது ரூ.16,494 ஆகவும், கர்நாடகத்தில் ரூ.15,103 ஆகவும், கேரளத்தில் ரூ.23,991 ஆகவும் உள்ளது. தமிழகத்திலோ அது ரூ.14 ஆயிரத்து 353 ஆக உள்ளது. இந்தியாவின் மொத்த கடன் பொறுப்பு ரூ.35 லட்சத்து 15,606 கோடியாகும்.
தனி நபர் கடனை பொறுத்தவரை இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 34,231 ரூபாய் கடன் உள்ளது. தமிழகத்தில் தனி நபர் கடன் பொறுப்பு மிகவும் குறைவாக இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ஆகவே தமிழகம் கடன் நிலைமையில் மோசமாக இல்லை. இது தீர்க்க முடியாத கடனும் அல்ல. கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
உலகம் மாவோயிஸ்டுகள் காணும் கனவை விட பெரியது
இது ஒருபுறம் இருக்க, இந்திய மாவோஸ்டுகள் 2050-ஆம் ஆண்டுக்குள் ஆயுதப் புரட்சியின் மூலம் மாவோஸ்ட் கம்யுனிச ஆட்சியை ஆட்சி அமைக்க விரும்புவதாக அறிவித்துள்ளார்கள்!ஆனால் உலகம் மாவோஸ்டுகள் காணும் கனவை விட பெரியது!
காரணம்! உலகம் ஜனநாயகம், மக்களாட்சி தத்துவங்களையே சிறந்ததாக கருதி வாழ பழகிகொண்டுவிட்டது!நேபாளில் கூட மாவோயிஸ்டுகளால் ஜனநாயக பாதையையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம்!மாவோ சொன்னது போலவோ அல்லது மார்க்ஸ் சொன்னது போலவே ஒரு ஐடியல் கம்யுனிச சமுதாயத்தை அமைக்க முடியாது.உலகில் இதுவரை இருந்த கம்யுனிச அரசுகளும் முழுமையாக அவர்களின் சிந்தாந்தப் படி அமையவும் இல்லை!ரஷ்யா முதற்கொண்டு ஐரோப்பாவிலிருந்த கம்யுனிச நாடுகளினால் கூட கம்யுனிச சித்தாந்தத்தை தொடர முடியாமல் ஜனநாயகப் பாதைக்கு திரும்பிவிட்டார்கள்.கம்யுஸ்ட் ஆட்சி பல நாடுகளில் உருவானாலும் கூட அவற்றின் நிலைத் தன்மை கேள்விக்குறியது.சீனாவில் ஒரு கட்சி கம்யுனிச ஆட்சி இருந்தாலும், அங்கும் சமத்துவம் இல்லை.ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.மனித உரிமை பற்றி அங்கு பேசவே கூடாது.அரசு அதிகாரிகளிடையே ஊழலுக்கும் பஞ்சமில்லை.எனவே கம்யுனிச அரசு என்பது அடிப்படையில் ஒரு கட்சி ஆட்சி என்பதை தவிர நடைமுறையில் மற்ற நாடுகளைப் போல தான். அதுவும் நக்சல்கள் அவர்கள் கூறுவதை போல 2050-இல் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தாலும், காலப்போக்கில் ஒன்றும் பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை!அப்போதும் ஏழைகள் இருப்பார்கள், முதலாளிகள் சுரண்டிக்கொண்டே தான் இருப்பார்கள்! என்ன கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்!.அவ்வளவு தான்!
எங்கெல்லாம் மாவோஸ்டுகள் குறிப்பாக வளர்ந்திருக்கிறார்கள்?.அரசுகளின் மெத்தனப் போக்கினால்,பாராமுகத்தால் எங்கெல்லாம் வறுமை தலைவிரித்தாடுகிறதோ,எங்கெல்லாம் முதலாளிகள்,கந்துவட்டிக்காரர்கள் மற்றும் அரசு அமைப்புகளால் விளிம்பு மனிதர்கள் வஞ்சிக்கப்படுகிறார்களோ அல்லது சுரண்டப் படுகிறார்களோ அங்கெல்லாம் நக்சல்கள் வளர்ந்திருக்கிறார்கள்! அதை அரசுகள் முதல் சமூகவியலாளர்கள் வரை அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.நக்சலிசம் உருவாக கூறப்படும் அனைத்து காரணங்களும் மறுக்க முடியாதவை.அரசுகள் முதலாளிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக ஏழைகளை, பழங்குடிகளை காலம் காலமாக வஞ்சித்து வருகிறார்கள் என்பதும் வெட்கப்பட வேண்டியது தான். நக்சல்கள் வளர்ந்த பகுதிகள் காலம் காலமாக வளர்சிப்பனிகளில் இருந்து புறக்கணிக்கபட்டன என்பதும் நூறு சதவிகிதம் மறுக்க முடியாதது தான்!
எத்தனையோ தலைவர்களை நாம் உண்மையான சமூக புரட்சியாளர்களாக நம்பியிருக்கிறோம்.கடைசியில் அவர்களெல்லாம் தங்களது சாதிக்குள் அல்லது சாதி அடையாளத்திற்குள் கரைந்து போயிருக்கிறார்கள் அல்லது சாதி அபிமானிகளால் கரைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது வரலாறு!
கருணாநிதி செய்தது சரியா?தொடர்ந்து ஏமாற்றப்படும் தலித் கிறிஸ்தவர்கள்
தலித் கிறிஸ்தவர்கள் தங்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கவேண்டும் என கடந்த அறுபது ஆண்டுகளாக அரசியல் மற்றும் சட்டபூர்வமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.தொடர்ச்சியாக அதிகமான ஏமாற்றங்கள்! ஏராளமான வலிகள்! இருந்தும் மனவலிமையுடன் போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 2.408 கோடி ஆகும்.அதாவது மொத்த இந்திய மக்கள் தொகையில் 2.34%.அதில் இந்தியா முழுவதும் 1.6 கோடி தலித் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.அதாவது ஏறக்குறைய 66% சதவிகிதம் பேர். இந்திய கிறிஸ்தவ மதம் சாதி முறையை போதிப்பதில்லை என்றாலும் நடைமுறையில் ஜாதிய முறைகளையே பின்பற்றுகிறது.இந்து மதத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை என்னவோ, அதே தான் கிறிஸ்துவ மதத்திலும் அவர்கள் நிலை.
வரலாற்று பூர்வமாக, இந்து மதத்தில் உள்ள இழிநிலையில் இருந்து தங்களை காத்துக்கொள்ளவே தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் கிறித்துவத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் மாறினார்கள்.ஆனால் அங்கும் அவர்களின் சமூக,பொருளாதார மற்றும் கல்வி நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.தீண்டாமை என்ற இழிநிலைக்கு அங்கும் விடுதலை இல்லை.
தலித் சீக்கியர்கள் 1956-ஆம் ஆண்டும், தலித் புத்த மதத்தினர் 1990-ஆண்டும், தாழ்த்தப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டார்கள். காரணம்! புத்த மதமும், சீக்கிய மதமும் இந்துமதத்தில் இருந்து தோன்றியவை என்பதால் இங்குள்ள தலித்துகளின் கோரிக்கைகள் காலப்போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.ஆனால் தலித் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் இதுவரை பாராபட்சம்.காரணம்!கிறிஸ்துவமதம் அடிப்படையில் சாதியம்(வர்ணாசிரம தர்மம்) போதிப்பதில்லை;ஆனால் சமத்துவத்தை வலியுறுத்துகிறது.அடிப்படையில் இதன் தோற்றமும் இந்தியா அல்ல என்பதும் ஒரு காரணம்.
சங்க பரிவாரங்கள் தலித் கிறித்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கு காரணம், அது இந்து மதத்திலிருந்து மத மாற்றத்தை இன்னும் வேகப்படுத்தும் என்ற பயமே!
கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள தென்னிந்தியாவிலும், ‘மதசார்பற்றவர்கள்’ என மார்தட்டிக்கொள்ளும் அரசுகள் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை. ஒரே ஒரு சலுகை, அதாவது கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும்(தலித் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் அடக்கம்) பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் நீண்டகாலமாக இணைக்கப்பட்டுள்ளார்கள்.
மத்திய அரசும் இவர்களை 1993-ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% சதவிகித இடஒதுக்கீட்டில் இணைத்துள்ளது.இருந்தும் இதில் யார் அதிகம் பயன்பெறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.பி.ஜே.பி-யையும், காங்கிரசையும் தவிர மற்ற தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் அனைத்தும் தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளன.ஆனாலும் அனைத்துக் கட்சிகளும் இதில் வேகம் காட்டவில்லை எனபதும் உண்மை.
தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தலித் கிறிஸ்தவர்கள்.தி.மு.க. அரசு கிறிஸ்தவர்களுக்கு 3.5% சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவந்தபோது கிறிஸ்தவர்களில் உள்ள ஒரு ஆதிக்க பிரிவினர் தாங்கள் ஏற்கனவே 3.5%சதவிகிதத்திற்கும் அதிகமான வாய்ப்புகளைப் பெறுவதால் பிற்படுத்தப்பட்ட பிரிவிலேயே இருக்கிறோம் என கூறிவிட்டனர்.ஆனால் முதலமைச்சர் கருணாநிதி என்ன செய்திருக்கலாம்?அதில் ஒரு இரண்டு சதவிகிதமாவது தலித் கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கி இருக்கலாம்.மதரீதியான இடஒதுக்கீடு வழங்குவது என முடிவாகிவிட்ட நிலையில் தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு இருப்பதைப்போல தலித் கிறிஸ்துவர்களுக்கு அந்த 3.5% சதவிகிதத்தில் ஒரு இரண்டு சதவிகிதமாவது வழங்கி இருக்கலாம்.இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கலாம்! ஒரு நல்ல வாய்ப்பை நழுவவிட்டு விட்டார்கள்!
ஏழைகள் வயிர் எறிந்தால் ஐயோ எனப் போவார்கள் !
அரசுகளால் முதலாளிகளை பொருளாதார சிக்கலிலிருந்து மீட்க முடிகிறது.ஆனால் கோடிக்கணக்கான ஏழைகளைப் பாதிக்கும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை குறைக்க வழி தெரியவில்லை.கொழுத்துப் போகும் முதலாளிகளுக்கு அரசுகள் என்றும் துணையாக இருக்கும்!காரணம் அவர்களிடம் ஓட்டுக்கள் இல்லை!ஆனால் ஓட்டை விலைகொடுத்து வாங்க பணம் இருக்கிறது!
ஏழைகள் வயிறெரிந்தால் ஒரு நாள் ஐயோ எனப் போவார்கள்!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோர் 62 லட்சம் பேர்!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதோரின் எண்ணிக்கை 62 லட்சமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 35 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆண்டுதோறும், 10}ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் முதல் முதுநிலை பட்டதாரிகள், தொழிற்கல்வி தேர்ச்சி பெற்றோர் வரை ஏராளமானோர் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த 2007}ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள ஆண்கள், பெண்களின் மொத்த எண்ணிக்கை 51.51 லட்சமாக இருந்தது (இதில் ஆண்கள் 29.30 லட்சம்; பெண்கள் 22.21 லட்சம்).
2009-ம் ஆண்டு டிசம்பர் 31}ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள உயிர் பதிவேடுகளின் விவரங்களின் படி, வேலை தேடுவோர் எண்ணிக்கை 62 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள் ஓரிரு லட்சங்கள் மட்டுமே குறைவான எண்ணிக்கையில் உள்ளனர்.
பி.இ. உள்ளிட்ட தொழில் கல்வி தேர்ச்சி பெற்றோர், சட்டம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றோர், பட்டதாரி ஆசிரியர்கள், இதர கல்விதாரர்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பார்வையற்றோர், காது
கேளாதோர் உள்ளிட்ட கல்வியில் தேர்ச்சி பெற்று வேலை தேடும் ஊனமுற்றோர் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை எட்டியுள்ளது.
காத்திருப்போர் எண்ணிக்கையில் பிற்பட்டோர் 26 லட்சமாகவும், மிகவும் பிற்பட்டோர் 16 லட்சமாகவும், ஆதிதிராவிடர்}பழங்குடியினர் 18 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.
சென்னை, கோவை, கடலூர், மதுரை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், நாகப்பட்டினம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வேலைதேடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனினும், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
கடந்த 2008}ல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் 9.60 லட்சம் பேர். ஆனால், இதே ஆண்டில் அரசு பணிகளில் நியமிக்கப்பட்டோர் 26,748 பேர் மட்டுமே.
முடங்கிப்போன தொழில்முறை வழிகாட்டும் பிரிவு:
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வருவோருக்கு அடுத்து என்ன மேல் படிப்பு படிக்கலாம், அதற்கான கல்வி நிலையங்கள், வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் குறித்து வழிகாட்ட தனி பிரிவு தொடங்கப்பட்டது.
ஆனால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (இளைஞர் பயிற்சி), தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் திருவள்ளூர், தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இந்த வழிகாட்டும் பிரிவு இயங்கவில்லை.
பதிவு செய்து காத்திருப்போரில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தொழிற் கல்வி பயிலாதவர்கள் ஆவர். இவர்களில் 50 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
காத்திருந்து…காத்திருந்து…
இப்போதைய நிலையில் கடந்த 1981 முதல் 84 வரை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே நேர் காணல் கடிதம் அனுப்பும் நிலை உள்ளது.
பதிவு செய்து முதலாவது நேர்காணலில் பங்கேற்க குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் வரை காத்திருக்க
வேண்டியுள்ளது.
வயது வரம்பு கடந்ததால் 1986}ம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்தவர்களை நேர்காணலுக்கு அழைக்காமல் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது.
ஆனால், அரசின் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு துறையில் மட்டும் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை அரசு விரைவாக நிரப்ப வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவுள்ளது.
2009-ம் ஆண்டு டிசம்பர் 31}ம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள உயிர் பதிவேடுகளின் விவரங்களின் படி, வேலை தேடுவோர் எண்ணிக்கை 62 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள் ஓரிரு லட்சங்கள் மட்டுமே குறைவான எண்ணிக்கையில் உள்ளனர்.
பி.இ. உள்ளிட்ட தொழில் கல்வி தேர்ச்சி பெற்றோர், சட்டம் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றோர், பட்டதாரி ஆசிரியர்கள், இதர கல்விதாரர்கள் உள்ளிட்டோரின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பார்வையற்றோர், காது கேளாதோர் உள்ளிட்ட கல்வியில் தேர்ச்சி பெற்று வேலை தேடும் ஊனமுற்றோர் எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை எட்டியுள்ளது.
காத்திருப்போர் எண்ணிக்கையில் பிற்பட்டோர் 26 லட்சமாகவும், மிகவும் பிற்பட்டோர் 16 லட்சமாகவும், ஆதிதிராவிடர்}பழங்குடியினர் 18 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.
சென்னை, கோவை, கடலூர், மதுரை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், நாகப்பட்டினம், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வேலைதேடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனினும், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
கடந்த 2008}ல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் 9.60 லட்சம் பேர். ஆனால், இதே ஆண்டில் அரசு பணிகளில் நியமிக்கப்பட்டோர் 26,748 பேர் மட்டுமே.
முடங்கிப்போன தொழில்முறை வழிகாட்டும் பிரிவு:
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வருவோருக்கு அடுத்து என்ன மேல் படிப்பு படிக்கலாம், அதற்கான கல்வி நிலையங்கள், வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் குறித்து வழிகாட்ட தனி பிரிவு தொடங்கப்பட்டது.
ஆனால், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (இளைஞர் பயிற்சி), தட்டச்சர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் திருவள்ளூர், தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இந்த வழிகாட்டும் பிரிவு இயங்கவில்லை.
பதிவு செய்து காத்திருப்போரில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தொழிற் கல்வி பயிலாதவர்கள் ஆவர். இவர்களில் 50 சதவீதம் பேர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
காத்திருந்து…காத்திருந்து…
இப்போதைய நிலையில் கடந்த 1981 முதல் 84 வரை பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே நேர் காணல் கடிதம் அனுப்பும் நிலை உள்ளது.
பதிவு செய்து முதலாவது நேர்காணலில் பங்கேற்க குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
வயது வரம்பு கடந்ததால் 1986}ம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்தவர்களை நேர்காணலுக்கு அழைக்காமல் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது.
ஆனால், அரசின் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு துறையில் மட்டும் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை அரசு விரைவாக நிரப்ப வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவுள்ளது.
நன்றி:தினமணி
இதுதான் உலகம்:நுழைவுத்தேர்வில் வெற்றிபெற முடியாதவர் நோபல் பரிசை வென்றார்!
அதனால் பல பெற்றோர்கள்தங்கள் பிள்ளைகளை ‘கோச்சிங் நிறுவனங்களில் சேர்த்து
கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறார்கள்.கண்ணை மூடிக்கொண்டு பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து தங்கள் பிள்ளைகள் பொறியாளராகவும், மருத்துவராகவும் வரவேண்டும் என கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள்.
ஈர்ப்பு சக்தியற்றதா இந்துமதம்? ஒரு வழிப்போக்கனின் பார்வை!
ஹிந்துமதம் ஏன் மற்ற மதங்களைப் போல் மற்ற பிரதேசங்களுக்கு விரிந்து பரவவில்லை? அல்லது இந்தியர்கள்,நேபாளியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் தவிர மற்ற மக்களிடம் ஹிந்துமதத்திர்க்கு ஈர்ப்பு இல்லாததற்கு காரணம் என்ன?நீங்கள் சொல்லலாம் ! ஹிந்துமதம் அமெரிக்காவிலும் இருக்கிறது. இலண்டன், சிங்கப்பூர், ஏன் உலகம் முழுவதும் அனைத்துக் கண்டங்களிலும் கூட இருக்கிறது எனச் சொல்லலாம்! இருக்கிறது !ஆனால், அங்கும் கூட இந்தியர்கள் ,நேபாளியர்கள் அல்லது இலங்கைத் தமிழர்களிடம் மட்டும் தான் ஹிந்துமத வாழ்க்கை முறை, வழிபாடு இருக்கிறது என்ற உண்மையை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்!
அண்மைய பின்னூட்டங்கள்